Don't Miss!
- News கோயிலில் பிரார்த்தனை செய்து பிரசாரத்தை தொடங்கிய செஞ்சி மஸ்தான்.. டீ போட்டு வாக்கு சேகரித்தார்
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
மலையாள நடிகை ஜோதிர்மயிக்கு விவாகரத்து கிடைத்தது
கோட்டயத்தைச் சேர்ந்தவர் ஜோதிர்மயி. ஆரம்பத்தில் மாடல் அழகியாக திகழ்ந்த அவர் பின்னர் சினிமாவுக்கு வந்தார். ஏராளமான மலையாளப் படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் தலைநகரம், நான் அவன் இல்லை, வெடிகுண்டு முருகேசன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே இவருக்குக் கல்யாணமாகி விட்டது. கேரளாவைச் சேர்ந்த நிஷாந்த் குமார் என்பவரை மணந்து வாழ்க்கையும் நடத்தி வந்தார் ஜோதிர்மயி. இருப்பினும் தனக்குத் திருமணம் ஆனதையே அவர் வெளிப்படுத்திக் கொள்ளாமல் கமுக்கமாக நடித்து வந்தார்.
இந்த நிலையில் ஜோதிர்மயி தொடர்ந்து தீவிரமாக சினிமாவில் நடித்து வருவது குறித்து, குறிப்பாக கவர்ச்சியாக நடிப்பது குறித்து அவருக்கும், கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து விவாகரத்து கோரி நிஷாந்த் குமார் திருவனந்தபுரம் கோர்ட்டில் மனு செய்தார்.
அவர்களிடம் குடும்ப நீதிமன்றம் கவுன்சிலிங் நடத்திப் பார்த்தது. ஆனால் ஒத்துவரவில்லை. இதையடுத்து இருவருக்கும் தற்போது விவாகரத்து வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இனிமேல் சினிமாவில் முழுவீச்சில் கவனம் செலுத்தப் போவதாக ஜோதிர்மயி தெரிவித்துள்ளார்.