பிரபுதேவா காதல் – கைவிடக் கோரும் அட்வைஸ்களை புறம் தள்ளிய நயன்தாரா

நயன்தாரா- பிரபுதேவா காதல் என்பது பழைய செய்தி. இப்போது இருவரும் குடும்பம் நடத்தவே ஆரம்பித்து விட்டனராம். ஈசிஆர் சாலையில், தனி வீடு ஒன்றை வாங்கி நயன்தாராவுக்கு பரிசாக அளித்துள்ளாராம் பிரபுதேவா. அங்குதான் இருவரும் சந்தித்துக் கொள்கிறார்களாம்.
இந்தக் காதலைப் பிரிக்க மனைவி ரமலத் கடுமையாக முயன்றும் முடியவில்லை. இதனால் திரையுலகப் பெரியவர்களை அணுகி பஞ்சாயத்து பேசுமாறு கோரி வருகிறார். அவருக்காக சிலர் பஞ்சாயத்தும் பேசிப் பார்த்தனர். ஆனால் அதை பிரபுதேவா கேட்பதாக இல்லையாம்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு மூத்த நடிகை நயன்தாராவை அணுகிப் பேசிப் பார்த்தள்ளார். இதெல்லாம் வேண்டாம், நல்ல பெண் நீ. நல்ல வாழ்க்கையைத் தேடிக் கொள் என்றெல்லாம் கூறிப் பார்த்தாராம்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட நயன்தாரா, இப்போது உங்களது காலம் போல இல்லை. எங்க காலம் இப்படித்தான் என்று கூறி தனது நிலையை தெளிவாக்கி விட்டு கிளம்பிப் போய் விட்டாராம்.
அறிவுரை கூறிய நடிகைக்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாகி விட்டாராம்.


Click it and Unblock the Notifications











