Don't Miss!
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
எங்கேயும் எப்போதும்..ஈகோ இல்லாத அனன்யா, அஞ்சலி
எங்கேயும் எப்போதும் படத்தில் நடிகர் விமலுக்கு பதிலாக புதுமுகம் ஷர்வானந்த் நடித்து வருகிறார். இப்படத்தில் அஞ்சலியும், அனன்யாவும் இரு நாயகிகளாக நடித்துள்ளனர்.
பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவுடன் சேர்ந்து ஆர். முருகதாஸ் தயாரிக்கும் படம் எங்கேயும் எப்போதும். இதில் 2 நாயகன்கள், நாயகிகள். ஜெய், அஞ்சலி, ஷ்ர்வானந்த் மற்றும் அனன்யா நடிக்கின்றனர். ஷர்வானந்திற்கு இது தான் முத்ல படம். இந்த படத்தி்ற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் முருகதாஸ் உதவியாளர் சரவணன்.
இது குறித்து சரவணன் கூறியதாவது,
இந்த படத்தில் 2 காதல் ஜோடிகள் உள்ளன. இது அவர்களின் காதல் கதை தான். கிளைமாக்ஸில் 2 ஜோடிகளும் இணைவது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் வில்லனும் கிடையாது, காதல் எதிரிகளும் கிடையாது. என்னடா வில்லனே இல்லை என்று நினைக்கிறீர்களா?
வில்லன் இல்லாமலேயே காதல் என்னவாகிறது என்பதை சுவாரஸ்யமாகக் கூறுகிறோம். ஹீரோயின் லிஸ்டில் சமமான இடத்தில் இருப்பவர்கள் அஞ்சலி, அனன்யா. கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல் நடிக்கின்றனர். அவர்கள் சேர்ந்து வரும் காட்சிகள் இல்லை. இருப்பினும் அவர்களுக்கு சமமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஷர்வானந்த் கதாபாத்திரத்தில் விமல் நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்சனையால் அவரால் நடிக்க முடியாமல் போனது. 90 சதவீத படபிடிப்பு முடிந்துவிட்டது. வரும் ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட முயற்சி மேற்கொண்டு வருகிறேன் என்றார்.