Don't Miss!
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
இந்திக்குத் திரும்புகிறார் ஸ்னிக்தா!
அஞ்சாதே படத்தில் இடம் பெற்ற கத்தாழைக் கண்ணாலே குத்துப் பாட்டு மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் ஸ்னிக்தா. அவரது பளிச் அழகும், அசத்தல் கவர்ச்சியும் அவரை சிறந்த குத்துப் பாட்டு ராணியாக மாற்றும் என பலரும் நம்பினர்.
ஆனாலும் அவரை நாயகியாக்குவதாக உறுதி அளித்தார் அறிமுகப்படுத்திய இயக்குநர் மிஷ்கின். இதனால் குஷியான ஸ்னிக்தா முழு நேர குத்துப் பாட்டு ராணியாக மாறும் முடிவை தள்ளி வைத்து விட்டு மிஷ்கினின் நந்தலாலா படத்தில் நடிக்க போய் விட்டார்.
படம் மிகுந்த தாமதத்திற்குப் பிறகு வெளியானது. இதில் ஸ்னிக்தாவின் நடிப்பு பரவலாக பேசப்பட்டபோதிலும் அவரைத் தேடி பட வாய்ப்புகள் வரவில்லையாம். குத்துப் பாட்டுக்கு ஆடுமாறு கேட்டுதான் நிறைய வாய்ப்புகள் வருகிறதாம்.
இதனால் அப்செட்டான ஸ்னிக்தா இப்போதைக்கு தமிழ் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளாராம். மீண்டும் இந்தியில் தீவிர கவனம் செலுத்தப் போவதாகவும் அவர் கூறுகிறாராம்.