Don't Miss!
- News ஜெய் ஸ்ரீராம் போலோ.. "பிஸ்னஸ் மேன்" கையை தூக்கிய கேப்பில்! ரூ.36000 அபேஸ்! பாஜக பிரச்சாரத்தில் திக்
- Lifestyle எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்திக்குத் திரும்புகிறார் ஸ்னிக்தா!
அஞ்சாதே படத்தில் இடம் பெற்ற கத்தாழைக் கண்ணாலே குத்துப் பாட்டு மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் ஸ்னிக்தா. அவரது பளிச் அழகும், அசத்தல் கவர்ச்சியும் அவரை சிறந்த குத்துப் பாட்டு ராணியாக மாற்றும் என பலரும் நம்பினர்.
ஆனாலும் அவரை நாயகியாக்குவதாக உறுதி அளித்தார் அறிமுகப்படுத்திய இயக்குநர் மிஷ்கின். இதனால் குஷியான ஸ்னிக்தா முழு நேர குத்துப் பாட்டு ராணியாக மாறும் முடிவை தள்ளி வைத்து விட்டு மிஷ்கினின் நந்தலாலா படத்தில் நடிக்க போய் விட்டார்.
படம் மிகுந்த தாமதத்திற்குப் பிறகு வெளியானது. இதில் ஸ்னிக்தாவின் நடிப்பு பரவலாக பேசப்பட்டபோதிலும் அவரைத் தேடி பட வாய்ப்புகள் வரவில்லையாம். குத்துப் பாட்டுக்கு ஆடுமாறு கேட்டுதான் நிறைய வாய்ப்புகள் வருகிறதாம்.
இதனால் அப்செட்டான ஸ்னிக்தா இப்போதைக்கு தமிழ் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளாராம். மீண்டும் இந்தியில் தீவிர கவனம் செலுத்தப் போவதாகவும் அவர் கூறுகிறாராம்.