Don't Miss!
- Finance பனமழை கொட்டும்.. அதிக லாபம் தரும் டாப் 10 முதலீட்டு திட்டங்கள்.. அடடா இவ்வளவு லாபமா!
- News அந்த ஜூஸ், மோர் தான் காரணமா? மயக்கம், நெஞ்சு வலி.. விஷ முறிவு மருந்து எடுத்துக்கொண்ட மன்சூர் அலிகான்
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களுக்கு ரகசியமாக உதவும் பாதுகாப்பு தேவதைகளாக இருப்பார்களாம்...!
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
இந்தியில் வேகமாக முன்னேற விரும்பும் திரிஷா
தென்னிந்திய கனவு தேவதை என்று இனிமேல் திரிஷா ரசிகர்கள் கூற முடியாது. காரணம், கட்டா மீத்தா இந்திப் படம் மூலம் அகில பாரத அழகியாக மாறியுள்ளார் திரிஷா.
ஏன் இந்த பாலிவுட் விசிட் என்று திரிஷாவிடம் கேட்டால், இந்தியா மட்டுமல்லாமல் உலகம் பூரவாவும் நான் பிரபலமாக வேண்டாமா, அதற்காகத்தான் பாலிவுட்டுக்கு வந்திருக்கிறேன் என்கிறார் புன்னகையுடன்.
கட்டா மீத்தா வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறதாம். இதனால் திரிஷா பூரிப்புடன் இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இனி இந்தியில் கூடுதல் கவனம் செலுத்தப் போகிறேன். அதேசமயம், தொடர்ந்து தமிழ், தெலுங்குப் படங்களிலும் நடிப்பேன். ஆனால் பாலிவுட் பெரியது. பரந்து விரிந்த ரசிகர்களைக் கொண்டது. எனவே சர்வதேச அளவில் நானும் புகழ் பெற பாலிவுட்தான் பெஸ்ட் வழி.
எனவே இதன் மூலம் வேகமாக முன்னேற விரும்புகிறேன் என்றார் திரிஷா.
பிறகு முக்கியமான இன்னொன்றையும் கூறியுள்ளார் திரிஷா. தென்னிந்தியப் படங்களை விட இந்திதான் மிகப் பெரிய திரையுலகமாம்.
பிறகு எதற்கு எடுத்த எடுப்பிலேயே இந்திக்குப் போகாமல் தமிழ்,தெலுங்கு என தடுமாறிக் கொண்டிருந்தார் திரிஷா என்று தெரியவில்லை!