Don't Miss!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- News சென்னை தடுமாறுவது ஏன்? 47 வகையான முயற்சிகளை செய்ததால் தான் இந்த வாக்குப்பதிவே : ஜெ.ராதாகிருஷ்ணன்
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இந்தியில் வேகமாக முன்னேற விரும்பும் திரிஷா
தென்னிந்திய கனவு தேவதை என்று இனிமேல் திரிஷா ரசிகர்கள் கூற முடியாது. காரணம், கட்டா மீத்தா இந்திப் படம் மூலம் அகில பாரத அழகியாக மாறியுள்ளார் திரிஷா.
ஏன் இந்த பாலிவுட் விசிட் என்று திரிஷாவிடம் கேட்டால், இந்தியா மட்டுமல்லாமல் உலகம் பூரவாவும் நான் பிரபலமாக வேண்டாமா, அதற்காகத்தான் பாலிவுட்டுக்கு வந்திருக்கிறேன் என்கிறார் புன்னகையுடன்.
கட்டா மீத்தா வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறதாம். இதனால் திரிஷா பூரிப்புடன் இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இனி இந்தியில் கூடுதல் கவனம் செலுத்தப் போகிறேன். அதேசமயம், தொடர்ந்து தமிழ், தெலுங்குப் படங்களிலும் நடிப்பேன். ஆனால் பாலிவுட் பெரியது. பரந்து விரிந்த ரசிகர்களைக் கொண்டது. எனவே சர்வதேச அளவில் நானும் புகழ் பெற பாலிவுட்தான் பெஸ்ட் வழி.
எனவே இதன் மூலம் வேகமாக முன்னேற விரும்புகிறேன் என்றார் திரிஷா.
பிறகு முக்கியமான இன்னொன்றையும் கூறியுள்ளார் திரிஷா. தென்னிந்தியப் படங்களை விட இந்திதான் மிகப் பெரிய திரையுலகமாம்.
பிறகு எதற்கு எடுத்த எடுப்பிலேயே இந்திக்குப் போகாமல் தமிழ்,தெலுங்கு என தடுமாறிக் கொண்டிருந்தார் திரிஷா என்று தெரியவில்லை!