Don't Miss!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- News தேர்தலுக்கு முன்பே பாஜகவுக்கு வெற்றி.. அருணாசல பிரதேசத்தில் 5 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சிலம்பம் கற்கும் மீனாட்சி!
மிருகம் படத்தை முடித்த சாமி, அப்படத்தின் ஷூட்டிங்கின்போது நாயகி பத்மப்ரியாவை கன்னத்தில் அறைந்ததாக சர்ச்சையில் சிக்கினார். இதனால் அவருக்கு ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் சாமியின் கோரிக்கையை ஏற்று சமீபத்தில் அந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து அடுத்த படத்திற்கு ரெடியாகி விட்டார் சாமி. படத்திற்கு சரித்திரம் என பெயரிட்டுள்ளார்.
தனது நாயகி சிலம்பாட்டம் தெரிந்தவராக இருக்க வேண்டும் என்பதில் சாமி உறுதியாக இருந்ததால், ஷூட்டிங்கைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் கருப்பசாமி குத்தகைதாரர் பட நாயகி மீனாட்சியை இறுதி செய்துள்ளார் சாமி.
கருப்பசாமிக்குப் பிறகு மீனாட்சிக்கு சரியான வாய்ப்பு அமையவில்லை. இந்த நிலையில் சாமி கூறிய கதை மீனாட்சிக்குப் பிடித்ததால் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டாராம். இருந்தாலும் மீனாட்சிக்கு சிலம்பாட்டம் தெரியாது. எனவே விரைவில் சிலம்பாட்டம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கண்டிஷன் போட்டுள்ளாராம் சாமி.
இதையடுத்து சிலம்பம் கற்க ஆரம்பித்துள்ளார் மீனாட்சி. அதுகுறித்து அவர் கூறுகையில், சாமி கூறிய கதையைக் கேட்டதும், இதுதான் நான் அடுத்து நடிக்கப் போகும் தமிழ்ப் படம் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். கதை அந்த அளவுக்கு வெயிட்டாக உள்ளது.
சாமி உண்மையிலேயே வித்தியாசமான இயக்குநர். இதுவரை இப்படி ஒருவரை நான் பார்த்ததே இல்லை.
இப்படத்துக்காக நான் சிலம்பம் கற்று வருகிறேன். இது வித்தியாசமான அனுபவமாக உள்ளது என்றார் அவர்.
அப்ப, சாமி 'அடிச்சா' மீனாட்சிக்கு கவலை இல்லை. கையில் தான் சிலம்பம் இருக்கே!
-
ஏன் என்னிடம் சொல்லல.. ஃபேவரைட் இயக்குநரிடம் சண்டைக்கு சென்ற அஜித்.. இப்படியும் நடந்திருக்கா?
-
விசித்ரா பாதிதான் சொல்லி இருக்காங்க..கவுண்டமணி அப்படிப்பட்ட ஆளுதான்.. வலைப்பேச்சு அந்தனன் பேட்டி!
-
ஒரு ஊருக்கே கிடா விருந்து.. மகள், மாப்பிள்ளைக்கு தடபுடலாக வந்த உணவு.. அமர்களப்படுத்திய ரோபோ ஷங்கர்!