காதல்-மனம் திறந்து சொல்கிறார் நயனதாரா

விஜய் டிவின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று காபி வித் அனு. இது இப்போது மூன்றாவது பாகத்தை எட்டியுள்ளது. காபி வித் அனு - சீசன் 3 என்ற பெயரில் புதுப் பொலிவுடன் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.
அனுஹாசன் வழங்கும் இந்த நிகழ்ச்சியின் முதல் பேட்டியாக நடிகை நயனதாராவின் நேர்முகம் இடம் பெறுகிறது.
முதல் வார விருந்தினராக பங்கேற்கும் நயனதாரா இந்த நிகழ்ச்சியின் மூலம் மனம் திறந்து வெளிப்படையாக பல விஷயங்களைப் பேசியுள்ளாராம். அதில் காதல் குறித்தும் விரிவாக சொல்லியுள்ளாராம் நயனாதாரா.
இதனால் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருந்தாலும் எந்தக் காதல் குறித்து நயனதாரா பேசியுள்ளார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











