1.10 கோடி..நயனதாரா பிடிவாதம்!

லிங்குச்சாமி இப்போது தயாரிப்பாளராகவும் சைடில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் என்ற பெயரில் பட நிறுவனத்தைத் தொடங்கி தீபாவளி என்ற படத்தை முதலில் தயாரித்தார். இப்படம் பெரிய வெற்றி பெற்றது.
இதையடுத்து நதியாவை முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்து பட்டாளம் என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து லிங்குச்சாமியின் இயக்கம் பிளஸ் தயாரிப்பில் புதிய படம் உருவாகவுள்ளது. இதில் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயனதாராவை புக் செய்தனர்.
இதற்காக ரூ. 1.25 கோடி சம்பளம் கேட்டார் நயனதாரா. பேரம் பேசிய பின்னர் ரூ.1.10 கோடிக்கு படிந்தது. இதையடுத்து அவருக்கு பெரிய அமவுன்ட் ஒன்றை அட்வான்ஸ் ஆக கொடுத்தார் லிங்குச்சாமி.
ஆனால் எதிர்பாராதவிதமாக நயனதாரா நடித்த குசேலன் மற்றும் சத்யம் ஆகிய இரு படங்களும் தோல்விப் பட வரிசையில் சேர்ந்து விட்டதால் நயனதாராவின் மார்க்கெட் தள்ளாடத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து நயனதாராவுக்கு 1.10 கோடி சம்பளம் அதிகம் என லிங்குச்சாமி தரப்பு நினைத்தது. இதையடுத்து சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு நயனதாராவிடம் கூறினர். ஆனால் அவரோ முடியவே முடியாது என்று கூறி விட்டாராம்.
மேலும், இந்த சம்பளத்திற்குத்தான் நடிப்பேன். இல்லாவிட்டால் விலகிக் கொள்கிறேன். ஆனால் அட்வான்ஸை திருப்பித் தர முடியாது என்று கூறி வருகிறாராம் நயனதாரா. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் லிங்குச்சாமி குழம்பியிருக்கிறார்.
இப்படியெல்லாமா பிரச்சினை வருமா?


Click it and Unblock the Notifications











