Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பள்ளிக்கூடம் தொடங்கும் ரம்பா!!
இந்தப் படம் குறித்து ரம்பா கூறுகையில்,
விடியும் வரைக் காத்திரு மிக விறுவிறுப்பான திரைக்கதை. இலங்கையில் சில காட்சிகளை எடுத்திருக்கிறோம். இன்னும் இரு பாடல் காட்சிகள் பாக்கியுள்ளன. பிரகாஷ் ராஜுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன்.
என் பயமெல்லாம் மக்களைப் பற்றித்தான். சில வருட இடைவெளிக்குப் பிறகு என்னை இப்போதுதான் பார்க்கிறார்கள். இதனால் எனக்கு வரவேற்பு எப்படி இருக்குமென்று தெரியவில்லை. கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு நடிக்கிறேன்.
எனக்கு இரண்டாவது ஹீரோயின் வேடம் கொடுப்பதாக எத்தனையோ முன்னணி இயக்குநர்கள் வந்தார்கள். ஆனால் அவர்களுக்கு நான் பெரிய கும்பிடாகப் போட்டு அனுப்பி விட்டேன்.
எத்தனை நாளானாலும் மீண்டும் தனி நாயகியாகத்தான் நடிப்பது என்று முடிவு செய்துவிட்டேன். அதனால்தான் இந்த இடைவெளி.
ராமன் தேடிய சீதையில்கூட நான்தான் நடிப்பதாகத் தான் இருந்தது. ஆனால் அந்தப் படத்தில் 5 ஹீரோயின்கள்... இரண்டாவது ஹீரோயினாகவே நடிக்க விரும்பாத நான் நாலுபேரில் ஒருத்தியாக நடிக்க முடியுமா. அதனால் ஒப்புக் கொள்ளவில்லை.
சென்னையில கூடிய விரைவிலேயே ஒரு பள்ளிக் கூடம் திறக்கப் போறேன். 5-ம் வகுப்பு வரைக்கும் இங்கிலீஷ் மீடியம் பிரைமரி ஸ்கூலாக அது இருக்கும். நான் 10ம் வகுப்பு வரைதான் படித்துள்ளேன். மற்றவர்கள் படிக்க என்னால் ஆன சின்ன முயற்சி இது என்றார்.
உயர்ந்த எண்ணம்தான்.