Don't Miss!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அப்படி போடு.. ஓட்டு போட நாளை வரிசையில நிக்க வேண்டாம்.. EC அறிமுகம் செய்த செம வசதி.. என்னன்னு பாருங்க
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
முற்றுகையில் சிக்கிய த்ரிஷா
அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன், தற்போது சர்வம் என்ற படத்தை இயக்கி வருகிறார். லண்டன் கருணாசின் ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் இதனை தயாரித்து வருகிறது.
இப்படத்தில் ஆர்யா-த்ரிஷா முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. தற்போது பாடல் காட்சிகளுக்காக படக்குழுவினர் கோவா சென்றுள்ளனர். இப்படத்தின் மூலம் முதன் முறையாக த்ரிஷா நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் (அடடே).
கோவா கடற்கரையில் நேற்று நடைபெற்ற பாடல் காட்சி படப்பிடிப்பின்போது நடிகை த்ரிஷா நீச்சல் ஆடுவதுப் போன்ற காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
அப்போது அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் த்ரிஷாவை அடையாளம் கண்டுக் கொண்டு அவரது பெயரை சொல்லி அழைத்து சூழ்ந்துக் கொண்டனர். இதைப் பார்த்த இயக்குனர் விஷ்ணுவர்தன் உடனடியாக விரைந்து சென்று ரசிகர் பட்டாளத்திடம் இருந்து த்ரிஷாவை மீட்டார்.
இதைத் தொடர்ந்து படப்பிடிப்பை கோவாவின் மக்கள் நடமாட்டம் அற்ற கடற்கரை பகுதிக்கு அவர் மாற்றினார். தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடந்து வருகிறது.