Don't Miss!
- News நாடு ஒற்றுமையாக இருக்க கீபோர்டில் A and D இடையே உள்ள எழுத்தை மோடி பார்க்கனும்: மா.கம்யூ போராட்டம்
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
முற்றுகையில் சிக்கிய த்ரிஷா
அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன், தற்போது சர்வம் என்ற படத்தை இயக்கி வருகிறார். லண்டன் கருணாசின் ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் இதனை தயாரித்து வருகிறது.
இப்படத்தில் ஆர்யா-த்ரிஷா முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. தற்போது பாடல் காட்சிகளுக்காக படக்குழுவினர் கோவா சென்றுள்ளனர். இப்படத்தின் மூலம் முதன் முறையாக த்ரிஷா நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் (அடடே).
கோவா கடற்கரையில் நேற்று நடைபெற்ற பாடல் காட்சி படப்பிடிப்பின்போது நடிகை த்ரிஷா நீச்சல் ஆடுவதுப் போன்ற காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
அப்போது அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் த்ரிஷாவை அடையாளம் கண்டுக் கொண்டு அவரது பெயரை சொல்லி அழைத்து சூழ்ந்துக் கொண்டனர். இதைப் பார்த்த இயக்குனர் விஷ்ணுவர்தன் உடனடியாக விரைந்து சென்று ரசிகர் பட்டாளத்திடம் இருந்து த்ரிஷாவை மீட்டார்.
இதைத் தொடர்ந்து படப்பிடிப்பை கோவாவின் மக்கள் நடமாட்டம் அற்ற கடற்கரை பகுதிக்கு அவர் மாற்றினார். தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடந்து வருகிறது.