Don't Miss!
- News IQவை டெஸ்ட் செய்யலாமா? இந்த படத்தில் குகை மனிதருக்குள் மறைந்திருக்கும் இன்னொரு மனித முகம்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
பாடணும், ரேவதி மாதிரி வரணும்..!
அந்தக் காலத்து நடிகைககள் எல்லாம் சாவித்ரி மாதிரி நடிப்பேன், பத்மினி மாதிரி நடிப்பேன் என்பார்கள். ஆனால் இப்போது வருகிறவர்களோ அப்படியெல்லாம் பெரிய லட்சியம் எதையும் கொண்டிருப்பதில்லை.
ஒரு சிலர் மட்டுமே முன்னாள் நாயகிகளை உதாரணம் காட்டி லட்சியப் பாதையில் நடைபோடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவராக மீரா நந்தன் உள்ளார். ரேவதி மாதிரி நடித்துப் பெயரெடுக்க வேண்டும் என்பதுதான் இவரது ஆசையாம்.
ரேவதியைப் போலவே இவரும் மலையாளத்துக்காரர்தான். அங்கு இப்போதுதான் ஹிட் ஆகியுள்ள மீரா, வால்மீகி மூலம் தமிழிலும் பெயரெடுத்து விட்டார்.
தற்போது அய்யனார் என்ற படத்தில் நடிக்கிறார். தேனப்பன் தயாரிக்கும் இப்படத்தின் நாயகன் 'மிருகம்' ஆதி. இதேபோல காதலுக்கு மரணமில்லை என்ற படத்திலும் நடிக்கிறாராம் மீரா.
கிளாமர் பண்ண மாட்டேன். ரேவதி மாதிரி நடிப்பேன். நல்ல கேரக்டர்களை மட்டுமே செய்வேன். நல்ல குரல் வளம் உள்ளது. எனவே எப்படியாவது ஒரு படத்திலாவது பாடி விடுவேன் என்று அடுக்கிக் கொண்டே போகிறார் மீரா.
பெயரே மீரா என்பதால் பக்திப் பாடல்களையும் பாடியுள்ளாராம் - மலையாளத்தில் ஒரு ஆல்பம் மூலமாக.*