Don't Miss!
- News 2 பூட்டுக்கள்.. அடுத்த 45 நாட்கள்.. வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதோ விவரம்
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பாடணும், ரேவதி மாதிரி வரணும்..!
அந்தக் காலத்து நடிகைககள் எல்லாம் சாவித்ரி மாதிரி நடிப்பேன், பத்மினி மாதிரி நடிப்பேன் என்பார்கள். ஆனால் இப்போது வருகிறவர்களோ அப்படியெல்லாம் பெரிய லட்சியம் எதையும் கொண்டிருப்பதில்லை.
ஒரு சிலர் மட்டுமே முன்னாள் நாயகிகளை உதாரணம் காட்டி லட்சியப் பாதையில் நடைபோடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவராக மீரா நந்தன் உள்ளார். ரேவதி மாதிரி நடித்துப் பெயரெடுக்க வேண்டும் என்பதுதான் இவரது ஆசையாம்.
ரேவதியைப் போலவே இவரும் மலையாளத்துக்காரர்தான். அங்கு இப்போதுதான் ஹிட் ஆகியுள்ள மீரா, வால்மீகி மூலம் தமிழிலும் பெயரெடுத்து விட்டார்.
தற்போது அய்யனார் என்ற படத்தில் நடிக்கிறார். தேனப்பன் தயாரிக்கும் இப்படத்தின் நாயகன் 'மிருகம்' ஆதி. இதேபோல காதலுக்கு மரணமில்லை என்ற படத்திலும் நடிக்கிறாராம் மீரா.
கிளாமர் பண்ண மாட்டேன். ரேவதி மாதிரி நடிப்பேன். நல்ல கேரக்டர்களை மட்டுமே செய்வேன். நல்ல குரல் வளம் உள்ளது. எனவே எப்படியாவது ஒரு படத்திலாவது பாடி விடுவேன் என்று அடுக்கிக் கொண்டே போகிறார் மீரா.
பெயரே மீரா என்பதால் பக்திப் பாடல்களையும் பாடியுள்ளாராம் - மலையாளத்தில் ஒரு ஆல்பம் மூலமாக.*