Don't Miss!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பாடணும், ரேவதி மாதிரி வரணும்..!
அந்தக் காலத்து நடிகைககள் எல்லாம் சாவித்ரி மாதிரி நடிப்பேன், பத்மினி மாதிரி நடிப்பேன் என்பார்கள். ஆனால் இப்போது வருகிறவர்களோ அப்படியெல்லாம் பெரிய லட்சியம் எதையும் கொண்டிருப்பதில்லை.
ஒரு சிலர் மட்டுமே முன்னாள் நாயகிகளை உதாரணம் காட்டி லட்சியப் பாதையில் நடைபோடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவராக மீரா நந்தன் உள்ளார். ரேவதி மாதிரி நடித்துப் பெயரெடுக்க வேண்டும் என்பதுதான் இவரது ஆசையாம்.
ரேவதியைப் போலவே இவரும் மலையாளத்துக்காரர்தான். அங்கு இப்போதுதான் ஹிட் ஆகியுள்ள மீரா, வால்மீகி மூலம் தமிழிலும் பெயரெடுத்து விட்டார்.
தற்போது அய்யனார் என்ற படத்தில் நடிக்கிறார். தேனப்பன் தயாரிக்கும் இப்படத்தின் நாயகன் 'மிருகம்' ஆதி. இதேபோல காதலுக்கு மரணமில்லை என்ற படத்திலும் நடிக்கிறாராம் மீரா.
கிளாமர் பண்ண மாட்டேன். ரேவதி மாதிரி நடிப்பேன். நல்ல கேரக்டர்களை மட்டுமே செய்வேன். நல்ல குரல் வளம் உள்ளது. எனவே எப்படியாவது ஒரு படத்திலாவது பாடி விடுவேன் என்று அடுக்கிக் கொண்டே போகிறார் மீரா.
பெயரே மீரா என்பதால் பக்திப் பாடல்களையும் பாடியுள்ளாராம் - மலையாளத்தில் ஒரு ஆல்பம் மூலமாக.*