Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தங்கச்சியுடன் காணாமல் போன காத்ரீனா கைப்
சமீபத்தில் மன்மதன் அம்பு படத்தின் ஷூட்டிங்குக்காக வெளிநாடு போன இடத்தில் சொகுசுக் கப்பலில் இருந்த கூட்டத்தில் காணாமல் போய் மீண்டு வந்தார் திரிஷா. தற்போது அதே ரேஞ்சில் காணாமல் போய் மீண்டுள்ளார் காத்ரீனா கைப்.
காத்ரீனா கைப் தற்போது ஜோயா அக்தரின் ஜிந்தகி நா மிலேகி டோபோரா என்ற படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு சமீபத்தில் ஸ்பெயினில் நடந்தது. இதில் தனது தங்கச்சி இஸபெல்லேவுடன் கலந்து கொண்டார் காத்ரீனா.
அவர்கள் தங்கியிருந்த பகுதி இயற்கை எழில் கொஞ்சும் இடமாம். சுற்றிலும் அழகான மலைகளும் இருந்ததால் அந்த எழிலில் தனது மனதை (சல்மானுக்குப் போக மீதம் உள்ளதை) பறிகொடுத்தார் காத்ரீனா.
இதையடுத்து அந்தப் பகுதியை சுற்றிப் பார்க்க தங்கச்சியுடன் கிளம்பி விட்டார். ஆனால் காலை உணவுக்கு அவர் வரவில்லை. இதனால் காத்ரீனா எங்கே என்று படக்குழுவினர் தேடத்தொடங்கினர். ஆனால் அவரைக் காணாததால் பதட்டமடைந்தனர்.
நீண்ட நேரமாகியும் இருவரும் திரும்பி வராததால் பீதி அதிகரித்தது. போலீஸில் புகார் கொடுக்க முடிவு செய்தனர். அந்த சமயத்தில் காத்ரீனாவும் இஸபெல்லேவும் அங்கு வரவே அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
பதட்டத்துடன் இருந்த படக்குழுவினரை அமைதிப்படுத்திய காத்ரீனா, தாங்கள் எங்கு போனோம் என்பதை விவரித்தார். மலைகளைப் பார்க்கப் போனதாகவும், ஆனால் திரும்பி வரும்போது பாதை மாறிப் போய் விட்டதாகவும் மிகுந்த சிரமப்பட்டு இருப்பிடத்தை அறிந்து வந்து சேர்ந்ததாகவும் கூறி பெருமூச்சு விட்டார் காத்ரீனா.
காணாமல் போய் மீண்டு வந்த காத்ரீனா மற்றும் அவரது தங்கச்சியைப் பார்த்த பிறகே படக்குழுவினருக்கு மூச்சு வந்ததாம்.
பாதை மாறிப் போவது எப்போதுமே ஆபத்துதான், காத்ரீனா கவனம்!