twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்-நீத்து

    By Sudha
    |

    இப்போதைக்கு கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணம் நீத்து சந்திராவிடம் இல்லையாம். இதை சமீபத்தில் துபாயில் தன்னை சூழ்ந்து கொண்ட ரசிகர்களிடமே டிக்ளேர் செய்து விட்டு வந்துள்ளாராம்.

    இந்திக்கார நீத்து சந்திரா, நான் கடவுள் படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்க வேண்டியவர். ஆனால் ஜஸ்ட் மிஸ் ஆகி விட்டது. இருப்பினும் யாவரும் நலம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த அவருக்கு தீராத விளையாட்டுப் பிள்ளை பெரும் அந்தஸ்தைக் கொடுத்தது. தற்போது ஆதி பகவன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார்.

    தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டாலும் கூட தமிழ் இன்னும் நீத்துவுக்கு கைகூடவில்லையாம். ஆனால் ஆதி பகவன் படத்தில் நடிக்க ஒப்பந்தமானதுமே முதலில் தமிழ் கற்க வேண்டும் என்று கூறி விட்டாராம் இயக்குநர் அமீர். இதனால் தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறாராம் நீத்து.

    படப்பிடிப்புக்கு இடை இடையே தமிழ் கற்பது சிரமமாக இருந்ததால் படப்பிடிப்பு முடிந்ததும் ஒரே மூச்சாக தமிழ் கற்கப் போகிறாராம்.

    சமீபத்தில் இவர் துபாய்க்கு ஒரு நடன நிகழ்ச்சிக்காகப் போயிருந்தபோது அங்கு பல ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு நீத்துவைப் பாராட்டித் தள்ளினராம். அவர்களது வாழ்த்து, புகழ்ச்சி மற்றும் ஜொள்ளு மழையில் சிக்கி நெகிழ்ந்தும், நெளிந்தும் போய் விட்டாராம் நீத்து.

    பலர் மேலும் ஒரு படி மேலே போய் உங்களைக் கல்யாணம் செய்து கொள்ள ஆசையாக இருப்பதாக கூற, எனக்கு இன்னும் கல்யாண ஆசை வரவில்லை. அந்தத் திட்டமும் இல்லை என்று கூறினாராம் நீத்து.

    நடிப்புச் சேவையை நீக்கமற முடித்து விட்டு கல்யாணத்திற்குத் திட்டமிட நினைத்திருக்கிறாரோ என்னவோ..!

    English summary
    Actress Neetu Chandra willing to learn Tamil quickly. She is acting with Jayam Ravi in Ameer's Adhi Bhagavan. Neetu is keen to do more films in Tamil and has no idea about marriage.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X