Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஐய்யய்யோ.. நான் போகலை! - அலறும் ஜெனிலியா
இலங்கை தலைநகர் கொழும்பில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடக்கிறது. இதில் தமிழ் சினிமாவின், இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகள் யாரும் போகவில்லை. தமிழரின் ரத்தக் கறை படிந்த இலங்கையில், அந்த படுகொலைகளை மறைக்க ராஜபக்சே செய்யும் திருகுதாள வேலை இது என்று தமிழ் உணர்வாளர்கள் எடுத்துச் சொன்னதைக் கேட்டு இவர்கள் அனைவரும் விழாவைப் புறக்கணித்தனர், யாரும் சொல்லும் முன்பே ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் தங்கள் புறக்கணிப்பை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் நேற்று கொழும்பில் தொடங்கிய ஐஃபா விழாவுக்கு சில இரண்டாம் நிலை பாலிவுட் நடிகர்கள் பங்கேற்றனர். இவர்களுடன் நடிகை ஜெனிலியாவும் கலந்து கொண்டதாக சிங்கள பத்திரிகைகள் மற்றும் இணையதளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்த செய்தி தமிழ் ஊடகங்களிலும் வெளியானது. இதனால் அவருக்கு தென்னகத்தில் ரெட் கார்டு போடும் நிலை ஏற்பட்டது.
இதைக் கேள்விப்பட்டு ஆடிப்போனார் ஜெனிலியா. "ஐயோ...நான் ஐஃபா விழாவுக்குப் போகவில்லை. உண்மையில் நான் சாயிஃப் அலிகான் மற்றும் ஷாரூக்கானுடன் மேடையில் நடனம் ஆடுவதாக இருந்தது. மனீஷ் மல்ஹோத்ராவுடன் ரேம்ப் வாக் பண்ணவும் ஒப்புக் கொண்டிருந்தேன். ஆனால் தமிழர் போராட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களைப் பார்த்த பிறகு நான் வி்லகிக் கொண்டேன்.
நான் தமிழில் அறிமுகமானவள். தமிழ் சினிமாவை நேசிக்கிறேன். இன்னும் நிறைய படங்கள் பண்ண வேண்டும் ஆசை உள்ளது. இன்னும் இரு தினங்களில் சென்னை வருகிறேன். தனுஷுடன் உத்தம புத்திரன் படத்தில் நடிக்கிறேன்.." என்றார்.
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!