ஹைதராபாத் செட்டில் நயனதாரா மயங்கினர்?

ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஒரு பெயரிடப்படாத தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் நயனதாரா. இதன் படப்பிடிப்பை கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் செட் போட்டு எடுத்து வருகிறார்கள்.
நயனதாரா பங்கேற்ற ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தபோது, திடீரென்று மயங்கி விழுந்துவிட்டாரம். இதனால் அதிர்ந்துபோன படப்பிடிப்புக் குழுவினர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அவர் மயங்கி விழுந்ததாகக் கூறப்பட்டது.
ஆனால் இந்த செய்தி நேற்று தெலுங்கு பத்திரிகைகளில் கொஞ்சம் 'விவகாரமான' அர்த்தத்துடன் வெளியாகி விட்டது. காரணம் அவர் மயங்கி விழுவது இது முதல் முறையல்ல. குசேலன் படத்தின்போதும் இப்படி நடந்தது.
செய்தி அறிந்ததும் உடனே அலறியடித்துக் கொண்டு தனக்கு வேண்டப்பட்ட சில பத்திரிகைகள் மற்றும் இணைய தளங்களுக்கு தானே போன் செய்து இதுகுறித்து விளக்கத்தை அளித்துள்ளார் நயனதாரா.
"யாரோ சிலர் வேண்டுமென்றே இப்படியெல்லாம் தவறான தகவல் பரப்புகிறார்கள். இப்படி பொய்யான செய்தியைக் கிளப்பி விடுபவர்கள் யார் என்றும் தெரியவில்லை.
கடந்த சில நாட்களாக 'பாடிகாட்' மலையாள படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு ஞாயிற்றுகிழமைதான் ஐதராபாத் வந்தேன். ஜூனியர் என்.டி.ஆருடன் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். அன்று நான் மயங்கி விழவில்லை. லேசான தலைவலி என்பதால் அமைதியாக உட்கார்ந்திருந்தேன். அதைக் கூட நான் யாரிடமும் சொல்வில்லை, என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் நயனதாரா வசமிருந்த ஒரே தமிழ்ப் பட வாய்ப்பும் பறிபோனதாக தகவல். இதற்கும் கூட ஒருவேளை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் விளக்கமளிப்பாரோ என்னமோ!


Click it and Unblock the Notifications











