Don't Miss!
- News கார்த்தி சிதம்பரத்துக்கு குட்நியூஸ்.. பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பித்து வழங்க ஹைகோர்ட் உத்தரவு
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சாமி படத்தை நிராகரித்த பத்மா
மிருகம் படத்தின் ஷூட்டிங் மதுரை பக்கம் நடந்தபோது சரியாக நடிக்காததால் ஆத்திரமடைந்த இயக்குநர் சாமி, பத்மப்ரியாவை கன்னத்தில் அடிக்கப் போக, அவர் கோபமடைந்து ஷூட்டிங்கைப் புறக்கணித்து விட்டு சென்னைக்கு வந்து சேர்ந்து தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்தார்.
புகாரை விசாரித்த தயாரிப்பாளர் கவுன்சில், சாமிக்கு ஒரு ஆண்டு தடை விதித்தது. இந்த நிலையில் மீண்டும் சாமி இயக்க வருகிறார்.
மிருகம் பட நாயகன் ஆதிதான் புதிய படத்தின் ஹீரோ. ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் பத்மப்ரியாவை நாயகியாகப் போடலாம் என்று சாமியிடம் பரிந்துரைத்துள்ளார். எனக்கு ஆட்சேபனை இல்லை என்று சாமி கூறியிருக்கிறார்.
இதையடுத்து பத்மப்பிரியாவை அணுகியுள்ளனர். ஆனால் அவருக்கு படத்தில் நடிக்க விருப்பமில்லை போல. எனவே ஸாரி சொல்லி விட்டாராம். இதையடுத்து வேறு நாயகியைத் தேடி வருகின்றனர்.