twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னைக் கண்டுக்கவே இல்லையே! - பூனம் வருத்தம்

    By Shankar
    |

    வெடி படத்தில் நான் ஒருத்தி நடிச்சிருக்கேன் என்பதையே மறைத்துவிட்டார்களே என மகா வருத்தத்தில் உள்ளார் நடிகை பூனம் கவுர்.

    பிரபு தேவா இயக்கத்தில், விஷால் - சமீரா ரெட்டி நடித்து வெளியாகியுள்ள படம் வெடி. சௌர்யம் என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக் இது.

    இந்த தெலுங்குப் பதிப்பில், கதாநாயகிக்கு இணையாக முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருந்தார் பூனம் கவுர் (நெஞ்சிருக்கும் வரை, தம்பிக்கோட்டை படங்களில் நடித்தவர்).

    தமிழில் இந்தப் படம் தயாரானபோது, அதே வேடத்தில் நடிக்க அழைத்தார் பிரபுதேவா. பூனமும் நடித்தார். ஆனால் இவர் நடித்தார் என்பதையே படம் பார்த்த போதுதான் தெரிந்து கொள்ள முடிந்தது. இத்தனைக்கும் ஹீரோயினுக்கு சமமான ரோல் வேறு!

    வெடி பட விளம்பரங்கள், பேட்டிகளில் கூட இவருக்கு முக்கியத்துவம் தரவில்லையாம்.

    இதனால் வெறுத்துப் போன பூனம், படத்தின் ஹீரோ அல்லது இயக்குநரைப் பார்த்து கடுமையாக சண்டை போட வேண்டும் என்று சென்னைக்கு வந்துள்ளார் இரு தினங்களுக்கு முன்.

    வந்து பார்த்தால், பிரபு தேவா, விஷால் யாருமே ஊரில் இல்லையாம். போன் செய்தாலும் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதாக வருகிறதாம்.

    விடுங்க அம்மணி... படமே தியேட்டர்களில் இல்லைன்னு ரிப்போர்ட் வர ஆரம்பிச்சிடுச்சி... இனி சண்டை போட்டு என்ன ஆகப் போவுது!

    English summary
    After the release of Vedi, all attention are on its hero Vishal and Sameera Reddy but everybody seems to have forgotten about Poonam Kaur who played a crucial character in the film. After known this, Poonam has rushed to Chennai to contact director Prabhu Deva or hero Vishal to speak on this. But she found that none of her Vedi unit members like hero Vishal and director Prabhu Deva were in town
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X