பங்களா கட்ட ஈ.சி.ஆரை அலசும் சமீரா ரெட்டி!
நடிகை சமீரா ரெட்டி ஒரு சொகுசு பங்களா கட்ட ஈ.சி.ஆர். ரோட்டில் இடம் தேடிக் கொண்டிருக்கிறார்.
நடிகை சமீரா ரெட்டிக்கு மும்பை ஜுஹூ பீச் அருகில் ஒரு வீடு உள்ளது. இருந்தாலும் சென்னையில் ஒரு பங்களா கட்ட அவர் தீவிரமாகியுள்ளார். அதற்குக் காரணம் உள்ளது. தமிழ் சினிமா மீது அவருக்கு திடீரென பிடிப்பு அதிகமாகி விட்டது. தமிழ் ரசிகர்கள் என் மீது பாசமழை பொழிகிறார்கள் என ஒரு ஆங்கில் பத்திரிகைக்கு அவர் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார்.
தற்போது வெடி படத்திற்குப் பின்னர் தீவிர தமிழ் சினிமா அபிமானியாகி விட்டார் அம்மணி. வெடி படத்திற்குப் பின்னர் அவரைத் தேடி நிறையப் படங்கள் வர ஆரம்பித்துள்ளனவாம். ஏற்கனவே வாரணம் ஆயிரம் படத்திற்குப் பி்ன்னர் அவருக்கு நிறைய தமிழ்ப் படங்கள் வந்தபோதும் அவர் தொடர்ந்து இந்தியிலேயே ஆர்வம் காட்டி வந்தார். தற்போதுதான் திடீரென அவருக்கு தமிழ் மீது அலாதிப் பற்று கிளம்பியுள்ளது. இதையடுத்து சென்னை வரும்போது தங்க, நீச்சல் குளத்துடன் கூடிய சொகுசு பங்களா கட்டத் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஈ. சி.ஆர். ரோட்டில் நல்ல இடம் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறார்.
தான் தொடர்ந்து தமிழிலேயே நடிக்கவிருப்பதை கோலிவுட்டினருக்கு தெரிவிக்கும் வகையிலேயே மும்பையைப் போல இங்கேயும் ஒரு பங்களாவை எழுப்பத் திட்டமிட்டுள்ளார் சமீரா என்கிறார்கள்.
நல்லா கட்டுங்க.. !


Click it and Unblock the Notifications











