ஜெனீலியாவுக்கு வந்த நேரம்!

பாய்ஸ் படம் மூலம் ஹரிணியாகி அறிமுகமாகி இப்போது ஜெனீலியாவாக வலம் வந்து கொண்டிருக்கும் அவருக்கு தமிழில் பெரிய அளவில் முன்பு மார்க்கெட் இல்லாமல் இருந்தது.
பாய்ஸ், சச்சின், பரத்துடன் சென்னை காதல் என தொடர்ந்து நடித்தும் கூட ஜெனீலியா எடுபடவில்லை. இந்த நிலையில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் சூப்பர் ஹிட் ஆகவே ஜெனீலியாவுக்கும் பெயர் கிடைத்தது.
தற்போது இந்தியில் அவர் கிளிக் ஆகி ஜானா து யா ஜானானா-2, லைப் பார்ட்னர் என நான்கு படங்களில் நடித்து வருகிறார்.
இதனால் அவருக்கு சற்று கிராக்கி கூடி விட்டது. தமிழ், தெலுங்குக் காரர்கள் அவரைக் கூப்பிட்டால் நான் ரொம்ப பிசி என்கிறாராம். அப்படியும் வலியுறுத்திக் கூப்பிட்டால் பெரிய சம்பளமாக கேட்கிறாராம்.
இதனால் தமிழ் சினிமாக்காரர்கள் ஜெனீலியாவை தவிர்க்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் தெலுங்குக் காரர்கள் விடாப்பிடியாக அவரை அனத்திக் கொண்டிருக்கிறார்களாம்.
இந்த நிலையில் சிரஞ்சீவியின் மைத்துனர் அல்லு அரவிந்த் தயாரிக்கும் புதிய தெலுங்குப் படத்தில் மிகப் பெரிய சம்பளத்திற்கு ஜெனீலியா ஒப்பந்தமாகியுள்ளாராம்.
தமிழுக்கு இப்போதைக்கு வரும் ஐடியாவில் ஜெனீலியா இல்லை என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











