வில்லிகளாகும் ஹீரோயின்கள்
தமிழ் சினிமாவில் டிரென்டுகள் மாறி வருகின்றன. ஹீரோக்கள் வில்லன்களாக நடிப்பது ஒரு பக்கம் இருந்தால், இப்போது ஹீரோயின்களும் வில்லத்தனத்தில் வெளுத்துக் கட்டத் தொடங்கியுள்ளனர்.
படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் வில்லத்தனமாக நடித்து பெரும் புகழ் பெற்றதைத் தொடர்ந்து பல்வேறு ஹீரோயின்களுக்கும் படையப்பா நீலாம்பரி கேரக்டர் போல கிடைத்தால் நடிக்கத் தயார் என அவ்வப்போது பேஷனாகி விட்டது.
ஆனால் சிலர்தான் அப்படி வில்லத்தனமாக வந்த கேரக்டர்களை ஏற்று நடித்தனர்.
உயிர் படத்தில் சங்கீதா நெகட்டிவ் ரோலில் கலக்கினார். இந்த நிலையில் சினேகா இப்போது வில்லத்தனம் செய்ய களம் இறங்கி விட்டார்.
தெலுங்கில் அவர் நடித்த தொலிவளப்பு என்ற படத்தில் கிட்டத்தட்ட வில்லத்தனம் கலந்த ஹீரோயின் கேரக்டரில்தான் அவர் நடித்துள்ளார்.
அந்தப் படத்தை தற்போது தமிழில் ஹரி என்ற பெயரில் டப் செய்கின்றனர்.
இதேபோல கோவா படத்திலும் வில்லத்தனம் செய்கிறார் சினேகா. வில்லத்தனமாக இருந்தாலும் இந்த கேரக்டர் வெகுவாக பேசப்படும் என்பதால் கதையைக் கேட்ட மாத்திரத்திலேயே நான்தான் நடிப்பேன் என்று கூறி விட்டாராம் சினேகா.
இந்த வரிசையில், தற்போது முரட்டுக்காளை ரீமேக்கில், சிந்து துலானி வில்லத்தனம் நிறைந்த கேரக்டரில் வருகிறார்.
நம்ம சந்தியாவும் கூட நூற்றுக்கு நூறு ரீமேக் படத்தில் வில்லத்தனமாகத்தான் வருகிறாராம்.
பரவாயில்லை, ஹீரோயின் வாய்ப்பு குறைந்து போனால் வில்லியாகியும் கலக்கலாம்.


Click it and Unblock the Notifications











