Don't Miss!
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
வீர மறத்தி - தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்ட மனோரமா
பழம்பெரும் நடிகையான மனோரமா ஜாதி ரீதியான நிகழ்ச்சிகளில் பொதுவாக கலந்து கொள்ள மாட்டார். இவரை பலரும் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று ரொம்ப காலமாக நினைத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் இவர் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது ரொம்ப சமீப காலமாகத்தான் நிறைய பேருக்குத் தெரியும்.
இந்த நிலையில், நெல்லை மாவட்டம் நெல்கட்டும்செவலில் நடந்த பூலித்தேவன் 294வது பிறந்தநாள் விழாவில் புதிய பார்வை ஆசிரியர் நடராஜன், நடிகை மனோரமா, நடிகர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்ப களதர்த்தர்களில் ஒருவர்தான் பூலித்தேவன். விழாவுக்கு நடராஜன் தலைமை வகித்தார். நடிகை மனோரமா, நடிகர் செந்தில், இயக்குனர் மனோஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூலித்தேவர் அறக்கட்டளை பொருளாளர் வேலாயுதசாமி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகை மனோரமா தனது ஜாதிப் பற்றை வெளிப்படுத்தினார்.
அவர் பேசுகையில்,
இளைஞர்கள் முதலில் பெற்றோர், படிப்பு, முன்னேற்றம் ஆகியவற்றை காதலிக்க வேண்டும். ஒரு அந்தஸ்துக்கு வந்த பின்னர் பெண்களை காதலியுங்கள். 20 வயதில் காதலித்து உங்கள் வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.
மணமகன், மணமகள் எய்ட்ஸ் சோதனைக்கு பின் திருமணம் செய்து கொள்வதை அரசு கட்டாயப்படுத்த வேண்டும். இனி நான் நடிக்கும் திரைப்படங்களில் எனது பெயர் வீர மறத்தி மனோரமா என வெளிவரும் என்றார்.
நடராஜன் பேசுகையில்,
தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனின் ஆட்சியில் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோயில் சிற்பங்களை மறைக்க முடியாதோ அதேபோல பூலித்தேவர் வரலாற்றை யாரும் மறைக்க முடியாது.
வரலாற்றில் நமது பங்கு என்ன என்று தெரியவில்லை. அதனால்தான் நாம் மற்றவர்களுக்கு எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்து வருகிறோம். எனவே உங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள். அவர்கள் கல்வி கற்றால் எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்வார்கள். மேலும் குழந்தைகளை வீரம் உள்ளவர்களாகவும் வளர்க்க வேண்டும் என்றார்.
-
ஊட்டி மலை ப்யூட்டி.. உதகைக்கு டூர் போறீங்களா?.. அப்போ உங்க பிளே லிஸ்ட்ல இதெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க!
-
கார்த்திக்கை கொண்டாடும் தொழிலாளர்கள்.. மீண்டும் தோற்கும் ஆனந்த்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
Sivakarthikeyan: புல்லட்டை விட வலிமையானது வாக்கு.. ஆப்ரஹாம் லிங்கன் வாசகத்தை கூறிய சிவகார்த்திகேயன்!