கல்யாண சேதி எப்படி லீக் ஆச்சு.. டென்ஷனில் மீனா

ஜூலை 12-ம் தேதி பெங்களூர் கம்ப்யூட்டர் எஞ்ஜினீயரை மணக்கிறார் மீனா. திருமணத்துக்குப் பிறகு நடித்தாலும், சென்னையில் இருக்கப் போவதில்லையாம். பெங்களூர்தானாம்.
இந்த விவரங்களையெல்லாம் ஆரம்பத்தில் பத்திரிகையாளர்களுக்குச் சொல்லும் ஐடியாவே இல்லையாம். நிச்சயதார்த்தத்தை சைதாப்பேட்டையில் ரகசியமாக நடத்தி முடித்த கையோடு, வந்திருந்தவர்களிடம், தயவு செய்து இப்போதைக்கு சொல்லிவிடாதீர்கள். இன்னும் சில படங்கள் வர வேண்டியுள்ளது எனக் கேட்டுக் கொண்டாராம் மீனாவும், அவரது அம்மா ராஜ் மல்லிகாவும்.
ஆனால், அவர்களில் சிலர் பத்திரிகையாளர்களுக்குச் சொல்லிவிட, உடனடியாக பாய்ந்து போய் செய்தியைப் பிடித்துப் போட்டு பரபரப்பாக்கி விட்டார்கள்.
இதனால் ஏகக் கடுப்பாகிவிட்ட மீனா, நாம் இவ்வளவு சொல்லியும் விஷயத்தை லீக் பண்ணியது யார் என தனது நட்பு வட்டத்தை விசாரித்து வருகிறாராம். இந்த நிச்சயதார்த்தத்துக்கு மீனாவின் தோழிகள் சங்கவி, ஸ்ரீதேவி ஆகியோர்தான் வந்திருந்தனர். அவர்கள்தான் வேண்டுமென்றே விஷயத்தை உடைத்திருக்க வேண்டும் என்று கடுப்புடன் கூறிவருகிறாராம் மீனா.
கல்யாண மேட்டர் வெளிவந்துவிட்டதால், மீனா நடிக்கும் தொடர்களுக்கு பார்வையாளர்களிடம் மவுசு குறைந்துவிடும், புதிய பட வாய்ப்புகளும் குறைந்துவிடும் என அஞ்சுகிறாராம் மீனா.


Click it and Unblock the Notifications











