Don't Miss!
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சந்தோஷ் சிவனுக்கு ஜோடி ராதா மகள்
மகர மஞ்சு என்ற பெயரில் உருவாகும் இப்படம் பிரபல மலையாள ஓவியர் ராஜா ரவி வர்மா குறித்த கதையாகும்.
இந்தப் படத்தை மலையாளத்தில் உருவாக்கி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் டப் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
அடுத்த வாரம் கொச்சியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. லெனின் ராஜேந்திரன் படத்தை இயக்கவுள்ளார்.
ஒளிப்பதிவு, இயக்கம் ஆகியவற்றில் பிசியாக இருந்தபோதிலும், இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம் சந்தோஷ் சிவன். இதுகுறித்து அவர் கூறுகையில், இயக்குநர் லெனின் ராஜேந்திரன்தான் என்னை வற்புறுத்தி நடிக்க சம்மதிக்க வைத்தார். ராஜா ரவிவர்மா கேரக்டரில் நடிக்கிறேன். இது மிகப் பெரிய விஷயம்.
சிறு வயது முதலே ராஜா ரவி வர்மாவின் ஓவியங்களைப் பார்த்து பிரமித்து வளர்ந்தவன் நான். நான் சிறுவனாக இருந்தபோது, எனது பாட்டி எனக்கு கதைகளைச் சொல்லும்போது ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களை வரைந்து அதைக் கதையாக சொல்வார்.
எனக்கும் கூட கொஞ்சம் வரையத் தெரியும். ராஜா ரவிவர்மாவை சிறு வயது முதலே எனது நினைவுகளில் ஏற்றிக் கொண்டு விட்டதால், இந்த கலை எனக்கும் வந்தது என நினைக்கிறேன் என்றார் சந்தோஷ் சிவன்.
இப்படத்தில் சிவனுக்கு ஜோடியாக நடிக்கப் போவது நடிகை ராதாவின் மகள் கார்த்திகா.
திருவனந்தபுரம், கோவா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாம்.
சரி நடிப்பு உங்களுக்கு வருமா என்று கேட்டபோது, நான் முதன் முதலில் நடித்த படம் ராக். 1989ம் ஆண்டு வெளியான படம் இது. அப்படத்தில் நான் நடித்த காட்சியைப் பார்த்து விட்டு என்னுடன் நடித்த பங்கஜ் கபூர் சிரித்த சிரிப்பு இன்னும் என் மனதிலேயே உள்ளது.
இப்போது மீண்டும் நடிக்கப் போகிறேன். பங்கஜ் கபூர் சிரித்த சிரிப்பை நினைத்துப் பார்க்கும்போதுதான் சற்று பயமாக இருக்கிறது என்று சிரிக்கிறார் சிவன்.