Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
சம்பளத்தை கூட்டினார் பாவனா!
ஜெயம்கொண்டான் படம் ரிலீஸாகும் வரை தெலுங்கிலேயே தனது முழு கவனத்தையும் வைத்திருந்தார் பாவனா. ஆனால் ஜெயம்கொண்டான் வெளியாகி, ஹிட் ஆகி விடவே, தற்போது பாவனாவின் கவனம் டோட்டலாக கோலிவுட் பக்கம் பாய்ந்துள்ளது.
முன்பு தமிழ்ப் படங்களை ஒப்புக் கொள்ளாமல் தெலுங்கிலேயே அதிக அக்கறை காட்டிக் கொண்டிருந்தார் பாவனா. ஆனால் இப்போது ஜெயம்கொண்டன் ஹிட் படமாகியுள்ளால் மறுபடியும் தமிழில் ஒரு கலக்கு கலக்க தீர்மானித்துள்ளாராம்.
பாவனாவைத் தேடி பல தமிழ்ப் பட வாய்ப்புகள் வருவதால் ஆற அமர உட்கார்ந்து கதை கேட்க ஆரம்பித்துள்ளாராம். கூடவே, முன்பு எனது சம்பளம் வேறு, இப்போது வேறு என்றும் சொல்லி வைத்து விட்டு கதை கேட்கிறாராம்.
இப்போது 30 லகரமாக பாவனாவின் சம்பளம் உயர்ந்துள்ளதாம். ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு படம் ஓடியுள்ளது. உடனே சம்பள உயர்வா என்று புழுங்க ஆரம்பித்துள்ளனராம் தயாரிப்பாளர்கள்.
அது சரி, நயன் ரேஞ்சுக்கு உயர வேண்டாமா?