பூர்ணா..முண்டியடித்த ரசிகர்கள்!

முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் நடித்த பூர்ணா, படப்பிடிப்புக்காக வந்தபோது, அவரைத் தொட்டுப் பார்க்கும் ஆவலில் ரசிகர்கள் மேலே விழுந்து பிறாண்டி விட்டார்களாம்!
பூர்ணாவும் காதலில் விழுந்தேன் நாயகன் நகுலும் நடிக்கும் புதிய படம் கந்தக்கோட்டை. இதன் படப்பிடிப்பு குமரி மாவட்டம் பத்மநாபபுரம், நேசமணி நகர் உள்பட பல இடங்களில் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.
பூர்ணா பஸ்ஸிலிருந்து இறங்கி காரில் ஏறுவது போன்ற ஒரு காட்சி நேற்று வடசேரி பஸ்நிலையத்தில் அதிகாலை நேரத்தில் படமாக்கப்பட்டது.
'இவ்வளவு காலை நேரத்தில் கூட்டம் எங்கே கூடப் போகிறது!' என்ற நினைப்பில் சற்று அலட்சியமாக இருந்துவிட்டனர் படப்பிடிப்புக் குழுவினர். ஆனால் பூர்ணா பஸ்ஸை விட்டு இறங்கியதும், அவரை நோக்கி ஓடிவந்தது ரசிகர் பட்டாளம்.
நேரம் செல்ல, செல்ல அங்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது. பூர்ணாவை முற்றுகையிட்டு அவரைத் தொட்டுத் தரிசிக்கும் ஆவலில் மேலே விழ ஆரம்பிக்க, அவர் பயந்துபோய் படப்பிடிப்புக் குழுவிடம் தஞ்சமடைந்தார்.
இருந்தாலும் நமது ரசிக சிகாமணிகளின் ஆர்வமும், கைகளும் கட்டுக்கடங்காமல் போகவே, பாதுகாப்பாக திரும்ப வேண்டிய கட்டாயத்தில் பூர்ணாவும் அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். கஷ்டப்பட்டு சிரித்தபடி கைகுலுக்கவும் செய்தாராம்!


Click it and Unblock the Notifications











