Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
'ஒன்லி ஹோம்லி' - பாவனா
தமிழில் படு பிசியாக நடித்து வந்த பாவனா இப்போது தெலுங்கிலும், மலையாளத்திலும் ரொம்பப் பிசியாக உள்ளார். அதற்காக தமிழையும் கைவிட்டுவிடவில்லை அவர். வினய்யுடன், ஜெயம்கொண்டான், படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சொந்தக் குரலில் பேசி அசத்தியுள்ளாராம் பாவனா.
அதேபோல தெலுங்கில் ஹீரோ என்ற படத்தில் நடித்திருக்கிறார். படத்தில் கிளாமர் சைடிலும் சற்றே கவனம் செலுத்தியிருக்கிறாராம். அதேபோல மலையாளத்தில், பிருத்விராஜுடன் ஒரு படம், டுவென்டி டுவென்டி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
3 மொழிகளிலும் பிசியாக இருக்கும் பாவனாவுக்கு இன்று முக்கியமான நாள். அதாவது அவரது பிறந்தநாள். அந்த சந்தோஷத்தில் இருக்கும் பாவனா, படு திருப்திகரமாக தனது திரையுலக வாழ்க்கை போய்க் கொண்டிருப்பதாக சந்தோஷமாக கூறுகிறார்.
எனக்கு நல்ல இயக்குநர்கள் கிடைத்துள்ளனர். யாருமே என்னை இப்படி நடி, அப்படி நடி என்று கட்டாயப்படுத்துவதில்லை. அவர்கள் எதிர்பார்ப்பதை நானே கொடுத்து விடுவதால் அவர்களுக்கு என் மீது நம்பிக்கை அதிகம்.
எனக்கு ஹோம்லியான ரோல்கள்தான் பொருத்தமாக இருக்கும். அப்படித்தான் இதுவரை நடித்து வந்திருக்கிறேன். எனவே கிளாமர் வேடங்களில் நான் அதிக ஆர்வம் காட்டவில்லை. என்னிடமும் கிளாமர் காட்டியே ஆக வேண்டும் என்று யாரும் வற்புறுத்துவதும் கிடையாது என்கிறார் பாவனா.
தற்போது மலையாளத்தில் டுவென்டி டுவென்டி படத்தில் பாவனா நடித்துக் கொண்டிருக்கும் கேரக்டரில் முதலில் நடிப்பதாக இருந்தவர் மீரா ஜாஸ்மின். ஆனால் அவர் முடியாது என்று மறுத்து விட்டதால் பாவனாவைப் போட்டுள்ளனர். அதேசமயத்தில், அவரது கேரக்டரையும் பெரிதாக்கி விட்டார்களாம்.