twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜெகன் வெற்றி... ரோஜா அபார நம்பிக்கை!

    By Shankar
    |

    Roja
    ஹைதராபாத்: வரும் இடைத்தேர்தலில் கடப்பா தொகுதியில் போட்டியிடும் ஜெகன்மோகன் ரெட்டியின் வெற்றி 100 சதவீதம் உறுதி என்று நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும், நடிகையுமான ரோஜா ஹைதராபாதில் நிருபர்களிடம் கூறியதாவது:

    கடப்பா எம்.பி. தொகுதியில் போட்டியிடும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் வெற்றி உறுதியாகி விட்டது. அவர் அதிக அளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள்.

    அவரை எதிர்த்து யாரை நிறுத்தலாம் என்று காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. ஆனால் ஜெகன்மோகனை யார் எதிர்த்து நின்றாலும் எங்களுக்கு கவலை இல்லை. அவரது வெற்றியை யாரும் தடுக்க முடியாது. இந்த இடைத் தேர்தல் மூலம் காங்கிரஸ் மேலிடத்திற்கு ஆந்திர மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்," என்றார்.

    ஜெகன்மோகன் ரெட்டி 15-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார். தேர்தல் ஆணையம் இவருக்கு இதுவரை எந்த சின்னமும் ஒதுக்கவில்லை. ஆனாலும் ஜெகன்மோகன் ரெட்டி இன்று பிரசாரத்தை தொடங்கினார். இதற்காக அவர் தனது தந்தை ராஜ சேகரரெட்டி சமாதிக்கு சென்று வணங்கினார். பின்னர் தொண்டர்களுடன் இணைந்து பிரசாரத்தில் இறங்கினார்.

    English summary
    Actress Roja firm on the victory of Y S R Jagan Mohan Reddy, the president of YSR congress, in Cuddappah parliamentary constituency by election.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X