Don't Miss!
- News ஆரத்திக்கு பணம் கொடுத்த அண்ணாமலை? தீயாகப் பரவி வரும் வீடியோ.. விசாரணைக்கு கோவை ஆட்சியர் உத்தரவு!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
பூஜாவுக்கு சிங்கள மாப்பிள்ளை?
இந்திய - இலங்கை கூட்டுத் தயாரிப்பான பூஜா, தமிழ் நடிகையாக பிரபலமானவர். பெங்களூரில் வாசம் புரிந்து வரும் இவரது தந்தை சிங்கள மொழிக்காரர்.
இதனால் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் பயணம் மேற்கொண்டு நடித்து வரும் பூஜா, சமீப காலமாக தமிழ் சினிமாவில் எங்கேயுமே காணவில்லை. இத்தனைக்கும் நான் கடவுள் என்ற நல்ல படத்தில் நல்ல கேரக்டரில் நடித்துப் பெயர் பெற்றிருந்தும் கூட அவரைத் தேடி நல்ல வாய்ப்புகள் வந்து குவிந்தாலும் கூட பூஜாவைக் காண முடியவில்லை.
விசாரித்துப் பார்த்தபோது பூஜா வீட்டில் புகைச்சல் என்று தெரிய வந்த்து. பூஜா வீட்டில் அவருக்கு கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் இதில் பூஜாவுக்கு உடன்பாடு இல்லையாம். இன்னும் சில காலம் நடிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். கல்யாணத்திற்கு இப்போது அவசரப்படவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் வீட்டிலோ ஒரு சிங்களத் தொழிலதிபரைப் பார்த்து முடிவு செய்து இவர்தான் மாப்பிள்ளை என்று கூறி விட்டார்களாம்.
ஆனால் பூஜா அதை ஏற்க மறுத்து வருவதால், வீட்டில் புகைச்சலாகியுள்ளதாம். இதனால்தான் பூஜாவை எங்கும் காண முடியவில்லை.
இந்தியாவில்தான் பூஜாவைக் காண முடியவில்லை என்றாலும் கூட சிங்களத்தில் அவர் நடித்தக் கொண்டுதான் இருக்கிறாராம்.