Don't Miss!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'அது துணி செருப்பு...?!'-சினேகா
சமீபத்தில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலைச் சுற்றியுள்ள 14 கி.மீ. தூரத்தை கிரிவலம் வந்தார்.
கால்களில் செருப்போடு அவர் கிரிவலம் வந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகின. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் காலில் செருப்பு அணியாமல்தான் கோவிலைச் சுற்றி வருவார்கள்.
இதனால் சினேகாவை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக இந்து மக்கள் கட்சி அறிவித்தது. இதுகுறித்து நடிகை சினேகா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "2 வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் எனது கால் எலும்பு முறிந்து விட்டது. அது இன்னும் முழுமையாக குணமாகவில்லை.
என்னால் செருப்பு அணியாமல் நடக்க முடியாது. அதனால் கோவில்களுக்கு செல்வதற்கென்றே துணியினால் செய்யப்பட்ட செருப்பை தயார் செய்து வைத்திருக்கிறேன். அந்த செருப்பை அணிந்துகொண்டுதான் கிரிவலம் சென்றேன்.
இந்த விளக்கத்தை இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்களிடமும் சொல்லிவிட்டேன். அவர்களும் என் விளக்கத்தை ஏற்றுக் கொண்டனர், என்றார்.