சினேகாவின் 'இயல்பு'!

புன்னகை இளவரசி என கோலிவுட்டிலும், ரசிகர்களாலும் செல்லமாக அழைக்கப்படும் சினேகா, நடிப்பில் தத்ரூபமாக இருப்பதில் அக்கறை காட்டுபவர்.
காதல் காட்சியானாலும் சரி, இயல்பான நடிப்பாக இருந்தாலும் சரி இயற்கையாக இருக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்.
அந்த வகையில் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் காதல் காட்சிகளில் மிகவும் தத்ரூபமாக நடித்துள்ளாராம் சினேகா. நிஜக் காதலர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று சொல்லும் வகையில் அவரும், பிரசன்னாவும் படு இயல்பாக, கேஷுவலாக நடித்துள்ளனராம்.
படத்தின் கதையும், இயக்குநர் அதை கையாண்டு வரும் விதமும் சினேகாவை கவர்ந்து விட்டதால் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்துள்ளாராம் சினேகா.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இப்படத்தின் ஷூட்டிங் அமெரிக்காவில் நடந்து வருகிறது என்பது நினைவிருக்கலாம். ஷூட்டிங்குக்காக சினேகா, பிரசன்னா உள்ளிட்ட குழுவினர் அமெரிக்காவில் முகாமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











