Don't Miss!
- News மாமியாரை ஒரே எத்து.. அலேக்கா "தூக்கி" குப்பை தொட்டியில் போட்டாச்சு.. அந்த மகராசியின் பெயர் "லட்சுமி"
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சுனேனா உயிர் தப்பிய கதை!
தலைவாசல் படத்தை தயாரித்த சோழா பொன்னுரங்கம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரிக்கும் படம் 'யாதுமாகி'. இதில் சுனேனா நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியை, பாங்காக்கில் படமாக்க திட்டமிட்டார்கள். இதற்காக கதாநாயகன் சச்சின், கதாநாயகி சுனைன உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் 25 பேர் பாங்காக் பயணம் போனார்கள்.
பாங்காக்கில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள 'நோ மென் ஐலண்ட்' என்ற தீவில் பட்பபிடிப்பு துவங்கியது. கடற்கரையில் இருந்து கடலுக்குள் 20 கிலோ மீட்டர் தொலைவில் அந்த தீவு அமைந்திருந்தது. படப்பிடிப்பு குழுவினர் 3 படகுகள் மூலம் அங்கு சென்று படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருந்தார்கள்.
மாலை 4 மணிக்கு மேல் அங்கு படப்பிடிப்பு நடத்தினால் இருட்டில் கடலில் வழி தெரியாது, என்று ஏற்கனவே எச்சரித்து இருந்தார்களாம் வழிகாட்டிகள்.
அந்த எச்சரிக்கையையும் மீறி, மாலை 6 மணி வரை அங்கு படப்பிடிப்பு நடத்தினார்கள். படப்பிடிப்பு முடிந்ததும், 2 படகுகளில் தொழில்நுட்ப கலைஞர்கள் புறப்பட்டு கரைக்கு திரும்பி விட்டார்கள்.
கதாநாயகன் சச்சின், கதாநாயகி சுனைனா, டைரக்டர் பாலகுமார், ஒளிப்பதிவாளர் முகமது நசீர், பட அதிபர்களின் மகள்கள் சக்தி சங்கவி, மோகன சங்கவி ஆகியோர் தாமதமாக ஒரு படகில், கரைக்கு புறப்பட்டார்கள்.
கவிழ்ந்த படகில்...
அப்போது வானம் இருண்டது. திடீரென்று பலத்த மழை பெய்ததால் படகோட்டிக்கு வழி தெரியவில்லையாம்.
ஒரு வழியாக தூரத்தில் தெரிந்த விளக்கு வெளிச்சத்தை நோக்கி படகை வேகமாக ஓட்டினார். அப்போது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்தது. படகில் இருந்த சுனைனா உள்பட அனைவரும் கடலில் விழுந்தார்கள்.
அவர்கள் அனைவரும் 'லைப் ஜாக்கெட்' அணிந்திருந்ததால், கவிழ்ந்த படகை பிடித்துக்கொண்டு தொங்கினார்களாம். தூரத்தில் படகு கவிழ்ந்ததைப் பார்த்து, கரையில் இருந்த ஒரு படகோட்டி விரைந்து சென்று சுனைனாவையும், மற்ற படப்பிடிப்பு குழுவினரையும் மீட்டாராம் (அந்த இருட்டிலும் ஷார்ப்பான பார்வைதான்!).
இந்த 'பயங்கர' விபத்து குறித்த தகவலை படத்தின் பிஆர்ஓ எல்லோருக்கும் அவராகவே கூறி வருகிறார்...!