Don't Miss!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- News சின்னம் என்னனே தெரியல.. பிரச்சாரத்தில் சுணங்கிய திமுக கூட்டணி.. திருச்சியில் வேகம் எடுக்கும் அதிமுக!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அச்சம் நீக்கிய அஞ்சலி!
வெயில் இயக்குநர் வசந்தபாலன் இயக்கும் புதிய படம் அங்காடித் தெரு. இதில் திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டி என்ற நகரைச் சேர்ந்த மோகன் என்பவர் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக நடிப்பது கற்றது தமிழ், ஆயுதம் செய்வோம் பட நாயகி அஞ்சலி.
வித்தியாசமான திரைக்கதையுடன் கூடிய இப்படத்தில் புதுமுகம் என்றே தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்து வருகிறாராம் மோகன். ஆனால் காதல் காட்சிகளில்தான் ரொம்ப வெட்கப்படுகிறாராம்.
இதனால் பல டேக்குகள் போக வேண்டிய நிலை. இதை உணர்ந்த நாயகி அஞ்சலி, மோகனுக்கு காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்லி, அவருடன் சகஜமாக பேசி, அவரை ஈஸியாக்கி, நடிக்க ஊக்கம் கொடுத்தாராம்.
இதன் பின்னரே, அஞ்சலியுடனான காட்சிகளில் வெட்கம், அச்சம் நீங்கி இயல்பாக நடித்து வருகிறாராம் மோகன்.
புதுமுகமாச்சே முதலில் அப்படித்தான் இருக்கும், போகப் போக 'மைக்' மோகனாகி விடுவார் சின்னாளபட்டி மோகன்!