அதிக சம்பளம் கேட்டதால் அனுஷ்காவை நீக்கிய பாலிவுட் தயாரிப்பாளர்!
அதிக சம்பளம் கேட்டு அடம்பிடித்ததால் அனுஷ்காவுக்கு வந்த பெரிய பாலிவுட் வாய்ப்பு பறிபோனது.
தமிழில் வெளியான சிங்கம் படம் இப்போது ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கிறார்.
சிங்கம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் அனுஷ்கா. இவரே இந்தியிலும் நடித்தால் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளரும் இயக்குநரும் விரும்பினர்.
ஆனால் இந்திப் படம் என்றதும் தனது சம்பளத்தை ரூ 2 கோடிக்கும் அதிகமாக உயர்த்திக் கேட்டாராம் அனுஷ்கா. இதனால் அவர் வேண்டாம் என முடிவு செய்து, காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ஆனால் இதே அனுஷ்காவுக்கு தமிழில் ரூ 2 கோடி வரை தரத் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications