கற்பழிப்பு: ரூ.5 கோடி செலவில் ஆந்திர முதல்வர் செய்த சதி - ரோஜா

ஆந்திர மாநிலம் கோவூர் பகுதி தெலுங்குதேசம் கட்சி எம்எல்ஏவாக இருப்பவர் டிவி ராமாராவ். இவர் ஸ்புருகா என்ற நர்சிங் கல்லூரி நடத்தி வருகிறார்.
சமீபத்தில் இந்த கல்லூரியில் படித்த ஒரு மாணவி, எம்எல்ஏ தன்னை கெடுத்து விட்டதாக புகார் தெரிவித்தார். இவரை தொடர்ந்து மேலும் நான்கு மாணவிகள் எம்எல்ஏ ராமாராவ் தங்களை பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் தாங்கள் அதிலிருந்து தப்பி விட்டதாகவும், ஆந்திர கவர்னர் என்டி திவாரியிடம் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து ஆந்திர முதல்வர் இந்த விஷயத்தை சிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்தார். இது குறித்து மத்திய அரசு கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும் என கேரள வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆனால், அந்த எம்எல்ஏவும், தெலுங்குதேசம் கட்சியும் இந்த குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துள்ளனர்.
இது குறித்து ரோஜா கூறுகையில், ராமாராவ் மீது கேரள மாணவிகள் சுமத்திய குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. இது ஒரு பொய் புகார்.
இந்த புகாரை கொடுக்க, ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி அவர்களுக்கு ரூ. 5 கோடி பணம் கொடுத்துள்ளார். அந்த பெண்கள் பணத்தை வாங்கி கொண்டு புகார்களை தெரிவித்துள்ளனர்.
இந்த சதி திட்டத்துக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும் படி காங்கிரஸ் கட்சியினருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் ஆந்திர மக்கள் மத்தியில் தெலுங்கு தேசம் கட்சியின் பெயரை கெடுக்க சதி நடந்துள்ளது. தெலுங்குதேசம் ராமாராவுக்கு எப்போதும் துணை நிற்கும் என்றார் ரோஜா.


Click it and Unblock the Notifications











