Don't Miss!
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கற்பழிப்பு: ரூ.5 கோடி செலவில் ஆந்திர முதல்வர் செய்த சதி - ரோஜா
ஆந்திர மாநிலம் கோவூர் பகுதி தெலுங்குதேசம் கட்சி எம்எல்ஏவாக இருப்பவர் டிவி ராமாராவ். இவர் ஸ்புருகா என்ற நர்சிங் கல்லூரி நடத்தி வருகிறார்.
சமீபத்தில் இந்த கல்லூரியில் படித்த ஒரு மாணவி, எம்எல்ஏ தன்னை கெடுத்து விட்டதாக புகார் தெரிவித்தார். இவரை தொடர்ந்து மேலும் நான்கு மாணவிகள் எம்எல்ஏ ராமாராவ் தங்களை பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் தாங்கள் அதிலிருந்து தப்பி விட்டதாகவும், ஆந்திர கவர்னர் என்டி திவாரியிடம் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து ஆந்திர முதல்வர் இந்த விஷயத்தை சிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்தார். இது குறித்து மத்திய அரசு கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும் என கேரள வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆனால், அந்த எம்எல்ஏவும், தெலுங்குதேசம் கட்சியும் இந்த குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துள்ளனர்.
இது குறித்து ரோஜா கூறுகையில், ராமாராவ் மீது கேரள மாணவிகள் சுமத்திய குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. இது ஒரு பொய் புகார்.
இந்த புகாரை கொடுக்க, ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி அவர்களுக்கு ரூ. 5 கோடி பணம் கொடுத்துள்ளார். அந்த பெண்கள் பணத்தை வாங்கி கொண்டு புகார்களை தெரிவித்துள்ளனர்.
இந்த சதி திட்டத்துக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும் படி காங்கிரஸ் கட்சியினருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் ஆந்திர மக்கள் மத்தியில் தெலுங்கு தேசம் கட்சியின் பெயரை கெடுக்க சதி நடந்துள்ளது. தெலுங்குதேசம் ராமாராவுக்கு எப்போதும் துணை நிற்கும் என்றார் ரோஜா.