Don't Miss!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- News சின்னம் என்னனே தெரியல.. பிரச்சாரத்தில் சுணங்கிய திமுக கூட்டணி.. திருச்சியில் வேகம் எடுக்கும் அதிமுக!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஒரு அத்தை அம்மாவாகிறார்!
நமீதா வீட்டுக்குப் போவோர் அங்கு ஒரு குட்டிப் பாப்பாவை பார்த்திருக்கலாம். நமீதாவும், அந்தக் குழந்தையும் பாசத்துடன் துள்ளி விளையாடுவதையும் பார்த்திருக்கலாம். வீட்டில் இருந்தால் அந்தக் குழந்தையை விட்டு கொஞ்சம் கூட பிரிய மாட்டார் நமீதா.
அன்பைக் கொட்டி, பாசத்தை ஊட்டி வளர்த்து வருகிறார் அந்தக் குழந்தையை. அது வேறு யாரும் அல்ல, நமீதாவின் அண்ணன் மகள்தான்.
இந்தக் குட்டிப் பாப்பாவுக்கு இப்போது 3 வயதாகிறது. இதை தனது சொந்தக் குழந்தை போலவே பாவித்து வளர்த்து வருகிறார் நமீதா. இந்த நிலையில்தான் இக்குழந்தையை பேசாமல் தானே வளர்த்தால் என்ன என்ற எண்ணம் நமீதாவுக்கு வந்தது.
இக்குழந்தையை நானே தத்தெடுத்துக் கொள்கிறேன் என்று அண்ணனிடமும், வீட்டினரிடமும் நமீதா கூற, அவர்களும் உடனே ஓ.கே. சொல்லி விட்டார்களாம்.
இதையடுத்து தத்தெடுக்கும் வைபவத்திற்கு சொந்த ஊரான சூரத்தில் ஏற்பாடு செய்துள்ளனராம். விரைவில் சூரத்தில் தனது அண்ணன் மகளை மகளாக தத்தெடுக்கப் போகிறார் நமீதா.