Don't Miss!
- Sports KKR vs RR : ஐபிஎல் தொடரிலேயே 2வது மோசமான பந்துவீச்சு.. அஸ்வின் கேரியரையே காலி செய்த சுனில் நரைன்
- News திருவள்ளூரில் வெற்றி வாகை சூடும் காங்கிரஸ்? தேமுதிகவுக்கு ஷாக்.. பாஜக நிலைமை? தந்தி டிவி சர்வே
- Lifestyle செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- Automobiles மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
ஸ்னேகா படத்துக்கு வேலூரில் செருப்பு மாலை!
நடிகை ஸ்னேகா சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கோவிலைச் சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தூரத்தை கிரிவலமாக வந்தார்.
கிரிவலம் செல்லும் பக்தர்கள் காலில் செருப்பு அணிந்து செல்லக் கூடாது என்பது வழிவழியாகக் கடைப்பிடிக்கப்படும் மரவு. மண்ரோடாக இருந்த காலத்திலேயே யாரும் செருப்பணிந்து நடக்கமாட்டார்கள். இப்போது நல்ல சாலை போடப்பட்டுள்ளது. ஆனால் நடிகை ஸ்னேகா கிரிவலத்தின் போது காலில் செருப்பு அணிந்து சென்றார். இது புகைப்படத்துடன் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில், அகில பாரத அனுமன் சேனா என்ற இயக்கத்தின் வேலூர் கிளையினர் ஸ்னேகா உருவப்படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று காலை வேலூர் டவுன் மூங்கில்மண்டிதெரு பகுதியில் ஸ்னேகா உருவப்படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து, கைகளில் காவிக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் வந்து கலைத்தனர்.