ஸ்னேகா படத்துக்கு வேலூரில் செருப்பு மாலை!

By Staff

Sneha
வேலூர்: செருப்பு அணிந்தபடி கிரிவலம் வந்த ஸ்னேகாவின் செயலைக் கண்டித்து வேலூரில் அவரது படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் அனுமன் சேனா என்ற இயக்கத்தினர்.

நடிகை ஸ்னேகா சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கோவிலைச் சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தூரத்தை கிரிவலமாக வந்தார்.

கிரிவலம் செல்லும் பக்தர்கள் காலில் செருப்பு அணிந்து செல்லக் கூடாது என்பது வழிவழியாகக் கடைப்பிடிக்கப்படும் மரவு. மண்ரோடாக இருந்த காலத்திலேயே யாரும் செருப்பணிந்து நடக்கமாட்டார்கள். இப்போது நல்ல சாலை போடப்பட்டுள்ளது. ஆனால் நடிகை ஸ்னேகா கிரிவலத்தின் போது காலில் செருப்பு அணிந்து சென்றார். இது புகைப்படத்துடன் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந் நிலையில், அகில பாரத அனுமன் சேனா என்ற இயக்கத்தின் வேலூர் கிளையினர் ஸ்னேகா உருவப்படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று காலை வேலூர் டவுன் மூங்கில்மண்டிதெரு பகுதியில் ஸ்னேகா உருவப்படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து, கைகளில் காவிக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த போராட்டத்தின் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் வந்து கலைத்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X