Don't Miss!
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- News சென்னையை விடுங்க! சர்ரென முன்னேறிய தூத்துக்குடி, பெரம்பலூர், ராணிப்பேட்டை! உலகமே திரும்பி பார்க்குதே
- Automobiles லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஸ்னேகா படத்துக்கு வேலூரில் செருப்பு மாலை!
நடிகை ஸ்னேகா சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கோவிலைச் சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தூரத்தை கிரிவலமாக வந்தார்.
கிரிவலம் செல்லும் பக்தர்கள் காலில் செருப்பு அணிந்து செல்லக் கூடாது என்பது வழிவழியாகக் கடைப்பிடிக்கப்படும் மரவு. மண்ரோடாக இருந்த காலத்திலேயே யாரும் செருப்பணிந்து நடக்கமாட்டார்கள். இப்போது நல்ல சாலை போடப்பட்டுள்ளது. ஆனால் நடிகை ஸ்னேகா கிரிவலத்தின் போது காலில் செருப்பு அணிந்து சென்றார். இது புகைப்படத்துடன் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில், அகில பாரத அனுமன் சேனா என்ற இயக்கத்தின் வேலூர் கிளையினர் ஸ்னேகா உருவப்படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று காலை வேலூர் டவுன் மூங்கில்மண்டிதெரு பகுதியில் ஸ்னேகா உருவப்படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து, கைகளில் காவிக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் வந்து கலைத்தனர்.