Don't Miss!
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
திரும்பி வர விரும்பும் ரக்ஷிதா
கன்னடத்தில் ரக்ஷிதாவுக்கு கிரேசி க்வீன் என்று செல்லப் பெயர். தமிழிலும் இவர் தம் படம் மூலம் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். மதுர படத்தில் விஜய்யுடன் நடித்தார். அதன் பிறகு காணாமல் போய் விட்டார்.
2 ஆண்டுகளுக்கு முன்பு வரை கன்னடத்திலும் பிசியாக இரு்நத ரக்ஷிதா 3 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் -நடிகர் பிரேமை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
கவர்ச்சி தாரகையாக அறியப்பட்ட ரக்ஷிதாவுக்கு இப்போது ஒரு வயதில் சூர்யா என் மகன் உள்ளார். விரைவில் தயாரிப்பாளராக புது அவதாரம் எடுக்கப் போகிறாராம் ரக்ஷிதா. அதேசமயம் நடிக்கவும் ஆர்வமாக இருக்கிறாராம்.
அவரைத் தேடி நிறைய பட வாய்ப்புகள் வருகின்றனவாம். நல்ல கதையாக பார்த்துக் கொண்டிருக்கிறாராம். அது கிடைப்பதற்கு முன்பு அவரது கணவர் இயக்கி நடிக்கப் போகும் ஜோகய்யா படத்தில் ரக்ஷிதா முக்கிய கேரக்டரில் நடிக்கலாம் என்று கன்னடத்தில் பேசிக் கொள்கிறார்கள்.
மீண்டும் நடிக்க வருவது குறித்து ரக்ஷிதா கூறுகையில், பலரும் என்னை அணுகி வருகின்றனர். நானும் சில கதைகளைப் பார்த்து பரிசீலித்து வருகிறேன். எதையும் முடிவு செய்யவில்லை. முடிவு செய்து விட்டால் அடுத்து பேச்சுவார்த்தைதான்.
மீண்டும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். நான் இப்போது ஒரு மனைவி, ஒரு தாய். எனவே அதற்குப் பொருத்தமான கேரக்டரில் மட்டும்தான் நடிப்பேன். எனக்கு எனது கணவரின் ஆதரவும் அமோகமாக இருக்கிறது என்கிறார்.