Don't Miss!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- News என்ன வேகம்! கிளாம்பாக்கம் தோத்துடும் போலயே.. செங்கல்பட்டில் இவ்வளவு பெரிய பேருந்து நிலையமா?
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
மீண்டும் தமிழில் பிஸியாகும் ஸ்ரேயா!
ஜக்குபாய், கந்தசாமி என வரிசையாக படங்களை முடித்துவிட்டு திரும்பிப் பார்த்தால், ஸ்ரேயாவுக்கு தமிழில் படங்களே இல்லை!
விஷாலுடன் முன்பே ஒப்புக் கொண்ட தோரணையும் பாதி முடியும் நிலையில் உள்ளது.
'அடடா தமிழ் கூறும் நல்லுலகம் ஒரேயடியாக மறந்துவிட்டால் என்ன செய்வது?' என்ற கவலை வந்துவிட்டதோ என்னமோ... இப்போது கொஞ்சம் சுமாரான படங்களுக்கும் தலையாட்டுகிறாராம்.
ஆர்யாவுக்கு ஜோடியாக 'ஜிக்கு புக்கு' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஸ்ரேயா.
தனுஷுடன் குட்டி எனும் படத்திலும் நடிப்பார் என்று தெரிகிறது. இந்த இரண்டிலுமே கவர்ச்சி ப்ளஸ் தாராள கவர்ச்சிக்கு உத்தரவாதமிருக்கிறதாம்.
இதுகுறித்து ஸ்ரேயா இப்படிச் சொல்கிறார்:
இப்போது தமிழில் இரண்டு புதுப் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளேன். இரண்டு படங்களிலுமே நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம். இனிவரும் படங்களில் கவர்ச்சியும், நடிப்பும் கலந்த கலவையாக பார்க்கலாம்.
தமிழில் எனது படம் வெளியாகி சுமார் ஒரு வருடம் ஆகிறது.
ஆனாலும் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஒரு சில படத்தின் படப்பிடிப்பு வருடக்கணக்கில் ஆகிவிட்டதால் எனது படம் ரிலீஸாகாதது போன்ற தோற்றம் உள்ளது. இந்த ஆண்டு இடைவெளி இல்லாமல் நான் நடித்த படங்கள் ரிலீஸ் ஆகும், எனகிறார் ஸ்ரேயா.
எல்லாம் சரி, சுத்தத் தமிழில் பெயர் வைத்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது அந்த திட்டத்தை அரசு பரிசீலனை செய்யப் போகிறது என்றவுடன் சிக்கு புக்கு என மாற ஆரம்பித்து விட்டார்களோ..??