Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மீண்டும் தமிழில் பிஸியாகும் ஸ்ரேயா!
ஜக்குபாய், கந்தசாமி என வரிசையாக படங்களை முடித்துவிட்டு திரும்பிப் பார்த்தால், ஸ்ரேயாவுக்கு தமிழில் படங்களே இல்லை!
விஷாலுடன் முன்பே ஒப்புக் கொண்ட தோரணையும் பாதி முடியும் நிலையில் உள்ளது.
'அடடா தமிழ் கூறும் நல்லுலகம் ஒரேயடியாக மறந்துவிட்டால் என்ன செய்வது?' என்ற கவலை வந்துவிட்டதோ என்னமோ... இப்போது கொஞ்சம் சுமாரான படங்களுக்கும் தலையாட்டுகிறாராம்.
ஆர்யாவுக்கு ஜோடியாக 'ஜிக்கு புக்கு' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஸ்ரேயா.
தனுஷுடன் குட்டி எனும் படத்திலும் நடிப்பார் என்று தெரிகிறது. இந்த இரண்டிலுமே கவர்ச்சி ப்ளஸ் தாராள கவர்ச்சிக்கு உத்தரவாதமிருக்கிறதாம்.
இதுகுறித்து ஸ்ரேயா இப்படிச் சொல்கிறார்:
இப்போது தமிழில் இரண்டு புதுப் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளேன். இரண்டு படங்களிலுமே நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம். இனிவரும் படங்களில் கவர்ச்சியும், நடிப்பும் கலந்த கலவையாக பார்க்கலாம்.
தமிழில் எனது படம் வெளியாகி சுமார் ஒரு வருடம் ஆகிறது.
ஆனாலும் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஒரு சில படத்தின் படப்பிடிப்பு வருடக்கணக்கில் ஆகிவிட்டதால் எனது படம் ரிலீஸாகாதது போன்ற தோற்றம் உள்ளது. இந்த ஆண்டு இடைவெளி இல்லாமல் நான் நடித்த படங்கள் ரிலீஸ் ஆகும், எனகிறார் ஸ்ரேயா.
எல்லாம் சரி, சுத்தத் தமிழில் பெயர் வைத்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது அந்த திட்டத்தை அரசு பரிசீலனை செய்யப் போகிறது என்றவுடன் சிக்கு புக்கு என மாற ஆரம்பித்து விட்டார்களோ..??