Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அக்கா ரெட்டியைக் கைவிட்ட தங்கச்சி ரெட்டி!
சமீரா ரெட்டி பெரும் சோகத்துடன் உள்ளாராம். காரணம், தனது தங்கை தயாரிக்கும் தெலுங்கு, இந்திப் படத்தில் தன்னை நாயகியாகப் போடாததாலாம்.
இந்தியில் நடித்து வரும் சமீரா ரெட்டி, வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஆனால் அசல் படத்தில் அவர் ரசிகர்களை ஏமாற்றி விட்டார். இருந்தாலும் தற்போது மீண்டும் கெளதம் மேனனின் நடு நிசி நாய்களை நம்பியுள்ளார். இப்படம் தனக்கு நல்ல பெயரை மட்டுமல்லாமல் விருதையும் சேர்த்து அள்ளித் தரும் என்று நம்புகிறாராம் ரெட்டி.
இந்த சந்தோஷத்தில் இருந்து வந்த சமீராவுக்கு தங்கச்சி சுஷ்மா ரெட்டி மூலம் ஒரு சோகம் வந்து சேர்ந்தது. சுஷ்மா ரெட்டி ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரு படம் தயாரிக்கிறார். ஆனால் இதில் நாயகியாக சமீராவை அவர் தேர்வு செய்யவில்லையாம்.
சொந்த தங்கச்சியே தனது படத்தில் தன்னை நாயகியாகப் போடாதது குறித்து சமீராவுக்கு ஏமாற்றமாம். இருந்தாலும் நடுநிசி நாய்கள் மூலம் தனக்கு வரப் போகும் ஏற்றத்தை நினைத்து ஆறுதல் படுத்திக் கொண்டாராம் தன்னைத் தானே...