நமீதாவின் கண் தானம்!

சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் உறுப்பு தானம் குறித்து நமீதா உருக்கமாக பேசினார். நானும் எனது இரு கண்களையும் தானம் செய்ய முடிவு செய்துள்ளேன் என்று பேசிய நமீதா, எனது ரசிகர்களும் கண் தானம் மற்றும் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும். நாம் மண்ணுக்குப் போனாலும் கூட பலருக்கு வாழ்க்கை அளிக்க முடியும் என்பதற்கு உறுப்பு தானம் சிறந்த உதாரணம் என்றார் நமீதா.
ரசிகர்களுக்கு உருப்படியான அறிவுரையைக் கூறியுள்ள நமீதாவை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்.
நமீதா, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சேலை கட்டிக் கொண்டு படு க்யூட்டாக வந்திருந்தார். இதைப் பார்த்தவர்கள் சேலையிலும் அழகாக இருக்கிறீர்களே என்றார்களாம். அதற்கு நமீதா, சேலையில் நான் இன்னும் அழகாக இருப்பேன். சேலை கட்டவும் எனக்குப் பிடிக்கும். ஆனால் சினிமாவில் யாருமே என்னை சேலை கட்ட விடுவதில்லை.
சேலை எனக்கு பொருத்தமாக இருக்கும் என்று எனது தோழிகள் கூறினாலும் கூட தமிழ் சினிமாக்காரர்கள் என்னை சேலையில் பார்க்கவே விரும்புவதில்லை, கிளாமர் டிரஸ்தான் கொடுக்கிறார்கள் என்று புலம்பினாராம்.


Click it and Unblock the Notifications











