Don't Miss!
- News "பாம் வச்சிருக்கோம்! சீக்கிரம் வெடிக்க போகுது!" சென்னை வி.ஆர்.மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நதியா போல .. பூர்ணா விருப்பம்!
பார்க்க பளிச்சென இருக்கும் பூர்ணா, தமிழில் தனது பாதிப்பை படிப்படியாக வலுவாக்கி வருகிறார். தற்போது பார்த்திபனுடன் வித்தகன் படத்தில் சகலகலா நடிப்பையும் வெளிக்காட்டி நடித்து வருகிறார் பூர்ணா.
இப்படத்தில் மற்ற அனைவரையும் விட பூர்ணாவுக்குத்தான் வசனம் ஜாஸ்தியாக வைத்துள்ளனராம். இதனால் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார் பூர்ணா.
கோலிவுட்டில் உங்க நேரம் வந்து விட்டது போல இருக்கே என்று பூர்ணாவிடம் கேட்டால், இப்படத்தில் நான் துப்பாக்கி ஏந்தியும் வருகிறேன். இதற்காக பயிற்சி செய்து வருகிறேன் என்கிறார்.
நதியா போல குறும்புத்தனத்துடன் கூடிய கேரக்டர்களாக செய்ய வேண்டும் என்பது இவரது ஆசையாம்.
தமிழ் சினிமாவில் கேரள நடிகைகள் நிறையப் பேர் இருப்பது குறித்து அவரிடம் கேட்டால், தமிழ் ரசிகர்களுக்கு கேரள நடிகைகள் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம் என்கிறார். ஆனால் கேரளாவிலோ, அத்தனை பேரும் தமிழுக்குப் போய் விட்டார்களே என்று எல்லோரும் கவலைப்படுகிறார்களாம்.
தன்னைப் பார்ப்பவர்களிடம் பூர்ணா மகிழ்ச்சியுடன் சொல்லும் விஷயம், என்னைப் பார்க்கும் பலரும், ரேவதி போலவே இருக்கீங்களே என்று கேட்கிறார்களாம். சிலர் ஒரு படி மேலே போய், ரேவதியின் மகளா என்று கூட கேட்கிறார்களாம்.
முதலில் ஆசின் போல இருக்கிறார் என்று விஜய் பேசி வைத்தார். இப்போது ரேவதியின் 'மகளா'!!