ஆசினை அரட்டிய அனாமதேயப் பேர்வழி!

By Staff

Asin
சிங்கப்பூர் சென்றிருந்த ஆசினை ஒரு மர்ம நபர் தொடர்ந்து பின் தொடர்ந்து வந்ததால் ஆசின் பெரும் பீதியடைந்து விட்டாராம்.

சமீபத்தில் ஆசின் சிங்கப்பூர் சென்றிருந்தார். அப்போது 20 வயதுக்குள்ளிருக்கும் ஒரு நபர் ஆசினை பின் தொடர்ந்து வந்துள்ளார். ஆசின் எங்கு போனாலும் இந்த நபரும் போய் அங்கு நின்றிருக்கிறார்.

ஆசினுக்கு இது பெரும் குழப்பமாக இருந்திருக்கிறது. சரி, தீவிர ரசிகர் போலும் என விட்டு விட்டார் ஆசின்.

ஆனால் ஆசின் தங்கியிருந்த ஹோட்டலுக்கும் வந்து விட்டார் அந்த மர்ம நபர். ஆசினை நெருங்கிய அவர், அங்கு கூடியிருந்த கூட்டத்தை விலக்கி விட்டார். பின்னர் ஆசினை அவரது அனுமதியில்லாமலேயே போட்டோ எடுக்க ஆரம்பித்து விட்டார்.

இதைத் தடுக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்திய அவர், நான் ஆசினின் பாடிகார்டு, யாரும் வராதீர்கள் என்று அவர்களையே விலக்கி விட்டுள்ளார். குழம்பிப் போன ஆசின் அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.

அடுத்த நாள் ஆசின் கலந்து கொண்ட நிகழ்ச்சி அரங்கத்திற்குள் வந்த அந்த நபர், அங்கிருந்து பாதுகாப்பாளர்களை அணுகி, தான் இந்தூரிலிருந்து வந்துள்ளதாகவும், முக்கிய விஷயமாக ஆசினைப் பார்கக வேண்டும் என்று டுபாக்கூர் விட்டு ஆசின் சாப்பிட்டுக் கொண்டிருந்த டைனிங் டேபிளுக்கே வந்து விட்டாராம்.

அதேபோல, ஷாப்பிங் போன இடத்திலும் ஆசினைப் பின் தொடர்ந்து வந்துள்ளார்.

அடுத்த நாள் காலை ஹோட்டலைக் காலி செய்து விட்டு ஆசின் ஊருக்குக் கிளம்பியுள்ளார். போகும் வழியெல்லாம், ஏர்போர்ட்டிலும் அந்தப் பார்ட்டி இருந்து விடக் கூடாதே என்று பயந்து கொண்டே போனாராம் ஆசின். நல்ல வேளையாக அந்த நபர் அங்கு வரவில்லையாம்.

இது உண்மைதான் என்று உறுதிப்படுத்தியுள்ளார் ஆசினின் மேனேஜர்.

தற்போது மும்பையில் உள்ள தனது வீட்டுக்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளாராம் ஆசின்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X